About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 16 August 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.23

ப்³ரூஹி யோகே³ஸ்²வரே க்ருஷ்ணே 
ப்³ரஹ்மண்யே த⁴ர்ம வர்மாணி।
ஸ்வாம் காஷ்டா²ம் அது⁴நோ பேதே 
த⁴ர்ம: கம் ஸ²ரணம் க³த:॥

  • தர்ம வர்மாணி - தர்மத்தை காப்பாற்றுபவரும்
  • யோகேஸ்²வரே - யோகிகளுக்கு ஈஸ்வரரும்
  • ப்ரஹ்மண்யே - பரபிரம்ம ஸ்வரூபியுமான
  • கிருஷ்ணே - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
  • அதுநா - இப்பொழுது
  • ஸ்வாம் காஷ்டம் - தனது எல்லையை
  • உபேதே - அடைந்த அளவில்
  • தர்மஹ் - தர்மமானது
  • கம் ஸ²ரணம் கதஹ - யாரை சரணமாக அடைந்தது?
  • ப்ரூஹி - சொல்வீராக!

அறநெறிகளைக் காப்பாற்றுபவரும், யோகிகளுக்கெல்லாம் ஈசனும், அந்தணர்களை ஆதரிப்பவருமாகிய ஸ்ரீ கிருஷ்ணன், தன் இருப்பிடத்தை அடைந்த பிறகு, தர்மம் யாரைச் சரணமாகப் பற்றியது? என்பதை இப்போது எங்களுக்குச் சொல்லுங்கள்.

ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், முதலாவது ஸ்கந்தத்தில் 
முதலாவது அத்யாயம் முற்றிற்று.

||இதி ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹாபுராணே பாரம ஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம்
ப்ரத²ம ஸ்கந்தே⁴ நைமிஷீயோ பாக்²யாநே ப்ரத²மோ அத்⁴யாய:||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment