||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் ஆரம்பம்ll
1008 நாமாவளி சொல்லி அவனை துதிப்போமாகll
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 1
ஓம்|
விஸ்²வம் விஷ்ணுர் வஷட்காரோ
பூ⁴த ப⁴வ்ய ப⁴வத் ப்ரபு⁴:|
பூ⁴த க்ருத்³ பூ⁴த ப்⁴ருத்³ பா⁴வோ
பூ⁴தாத்மா பூ⁴த பா⁴வந:||
- 1. விஸ்²வம் - இது மேலான நிலையை, பரத்வத்தைச் சொல்லும் திருநாமம். பிரபஞ்சத்தைப் படைத்தவர். தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவர்.
- 2. விஷ்ணுர் - எல்லாவற்றிலும் அந்தர்யாமியாகப் புகுந்திருப்பவர். எல்லா இடங்களிலும் எங்கும் வியாபித்திருக்கிறார். அனைத்துப் பொருட்களையும் மறைப்பவர்.
- 3. வஷட்காரோ - எல்லாவற்றையும் தம் வசத்தில் வைத்துக் கொண்டு ஆள்பவர், நியமிப்பவர். அவர் பிரபஞ்சத்தை கட்டுப் படுத்துகிறார். வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஏற்கும் இடமாக இருப்பவர்.
- 4. பூ⁴த ப⁴வ்ய ப⁴வத் ப்ரபு⁴ஹு - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் தலைவர்.
- 5. பூ⁴த க்ருத்³ - தனது இச்சையாலே எல்லாவற்றையும் படைப்பவர், பராமரிப்பவர் மற்றும் அழிப்பவர்.
- 6. பூ⁴த ப்⁴ருத்³ - எல்லாவற்றையும் தாங்குபவர். பிரபஞ்சத்தை நிலைநிறுத்துபவர்.
- 7. பா⁴வோ - எல்லாப் பொருள்களுடனும் கூடியிருப்பவர். தனது பல அழகான பாவங்களுடன், முழு சிறப்புடன், மகிமையுடன் இருக்கிறார். அனைத்துப் பொருட்களையும் நிலை நிறுத்துபவர்.
- 8. பூ⁴தாத்மா - உலகத்துக்கு உயிராயிருப்பவர். அவர் அனைத்து உயிரினங்களின் சாரமாகவும், அனைத்து உயிரினங்களுக்கு உள்ளும் இருக்கிறார்.
- 9. பூ⁴த பா⁴வநஹ - எல்லாப் பொருள்களையும் விருத்தி அடையும் படிப் பாதுகாத்து வளரச் செய்பவர். ஒரு தாய் தன் குழந்தையைப் பேணி வளர்ப்பது போல் அவர் எல்லா உயிர்களையும் போஷிக்கிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment