About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 16 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் ஆரம்பம்ll 
1008 நாமாவளி சொல்லி அவனை துதிப்போமாகll

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 1

ஓம்| 
விஸ்²வம் விஷ்ணுர் வஷட்காரோ 
பூ⁴த ப⁴வ்ய ப⁴வத் ப்ரபு⁴:|
பூ⁴த க்ருத்³ பூ⁴த ப்⁴ருத்³ பா⁴வோ 
பூ⁴தாத்மா பூ⁴த பா⁴வந:||

  • 1. விஸ்²வம் - இது மேலான நிலையை, பரத்வத்தைச் சொல்லும் திருநாமம். பிரபஞ்சத்தைப் படைத்தவர். தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவர்.
  • 2. விஷ்ணுர் - எல்லாவற்றிலும் அந்தர்யாமியாகப் புகுந்திருப்பவர். எல்லா இடங்களிலும் எங்கும் வியாபித்திருக்கிறார். அனைத்துப் பொருட்களையும் மறைப்பவர்.
  • 3. வஷட்காரோ - எல்லாவற்றையும் தம் வசத்தில் வைத்துக் கொண்டு ஆள்பவர், நியமிப்பவர். அவர் பிரபஞ்சத்தை கட்டுப் படுத்துகிறார். வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஏற்கும் இடமாக இருப்பவர்.
  • 4. பூ⁴த ப⁴வ்ய ப⁴வத் ப்ரபு⁴ஹு - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் தலைவர்.
  • 5. பூ⁴த க்ருத்³ - தனது இச்சையாலே எல்லாவற்றையும் படைப்பவர், பராமரிப்பவர் மற்றும் அழிப்பவர்.
  • 6. பூ⁴த ப்⁴ருத்³ - எல்லாவற்றையும் தாங்குபவர். பிரபஞ்சத்தை நிலைநிறுத்துபவர்.
  • 7. பா⁴வோ - எல்லாப் பொருள்களுடனும் கூடியிருப்பவர். தனது பல அழகான பாவங்களுடன், முழு சிறப்புடன், மகிமையுடன் இருக்கிறார். அனைத்துப் பொருட்களையும் நிலை நிறுத்துபவர்.
  • 8. பூ⁴தாத்மா - உலகத்துக்கு உயிராயிருப்பவர். அவர் அனைத்து உயிரினங்களின் சாரமாகவும், அனைத்து உயிரினங்களுக்கு உள்ளும் இருக்கிறார். 
  • 9. பூ⁴த பா⁴வநஹ - எல்லாப் பொருள்களையும் விருத்தி அடையும் படிப் பாதுகாத்து வளரச் செய்பவர். ஒரு தாய் தன் குழந்தையைப் பேணி வளர்ப்பது போல் அவர் எல்லா உயிர்களையும் போஷிக்கிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment