||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
003. திருக்கரம்பனூர்
உத்தமர் கோயில், கதம்ப க்ஷேத்ரம் – திருச்சி
மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் 1 பாசுரம்
1. திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1399 - ஐந்தாம் பத்து ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
----------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
சிலமா தவம் செய்தும் தீ வேள்வி வேட்டும்
பலமா நதியில் படிந்தும் உலகில்
பரம்ப நூல் கற்றும் பயன் இல்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமன் பேர் கல்
- நெஞ்சே - எனது மனமே!
- உலகில் - இவ்வுலகத்தில்
- சில மாதவம் செய்தும் - சில பெரும் தவங்களைச் செய்தும்
- தீ வேள்வி வேட்டும் - ஓமாக்கினியை உடைய யாகத்தைச் செய்தும்
- பல மா நதியில் படிந்தும் - பல சிறந்த நதிகளில் மூழ்கியும்
- பரம்ப நூல் கற்றும் - விரிவாக நூல்களைப் படித்தும்
- பயன் இல்லை - அவற்றால் யாதொருபயனும் உண்டாகாது. ஆதலால் அவ்வாறெல்லாம் செய்வதை விட்டுத் தவறாமற் பயன் பெறும் படியாக
- கரம்பனூர் உத்தமன் பேர் கல் - திருக்கரம்பனூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள புருஷோத்தமனது திருநாமத்தைப் பல தரம் கூறுவாயாக
----------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 1
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1399 - உலகேழும் உண்டவனை அரங்கத்தில் கண்டேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பேரானைக்* குறுங்குடி எம் பெருமானை*
திருத்தண்கால் ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை*
முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும்*
மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும்*
ஆராது என்று இருந்தானைக்* கண்டது தென் அரங்கத்தே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment