||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 84 - பாற்கடல் கடைந்த பரந்தாமன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
அடைந்திட்டு அமரர்கள்* ஆழ் கடல் தன்னை*
மிடைந்திட்டு மந்தரம்* மத்தாக நாட்டி*
வடம் சுற்றி* வாசுகி வன் கயிறாகக்*
கடைந்திட்ட கைகளால் சப்பாணி*
கார்முகில் வண்ணனே! சப்பாணி|
- அமரர்கள் - துர்வாஸ முனிவரது சாபத்தினால் தாம் இழந்த ஐஸ்வர்யத்தைப் பெறுதற்காக, தேவர்கள்
- அடைந்திட்டு - உன்னைச் சரண் அடைந்ததற்காக
- ஆழ்கடல் தன்னை - உன்னுடைய படுக்கும் இடம் என்றும் பாராமல், ஆழமான க்ஷிராப்தியை நீ
- விடைந்திட்டு - நெருங்கி
- மந்தரம் - மந்தர பர்வதத்தை (மலையை)
- மத்து ஆக - கடைவதற்குரிய மத்தாகும்படி
- நாட்டி - நேராக நிறுத்தி
- வாசுகி - வாசுகியென்னும் பாம்பினை
- வன் வடம் - வலிய கயிறாக்கி அந்த மந்தர மலையாகிற மத்திலே
- கயிறு ஆக சுற்றி - கடையும் கயிறாகச் சுற்றி
- கடைந்திட்ட - அமிர்தம் வரும் வரை கடைந்த
- கைகளால் - திருக்கைகளால்
- சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
- கார்முகில் - கருத்த மேகம் (காளமேகம்) போன்ற
- வண்ணனே! - நிறமுடையவனே!
- சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
தேவர்கள் எம்பெருமானிடம் சரணமடைந்ததை உத்தேசித்து, ஆழமான க்ஷீராப்தி ஸாகரத்தை நெருங்கி, மந்தார மலையை மத்தாக எடுத்து நிறுத்தி, வாசுகியென்னும் பாம்பை கயிறாக மத்தில் (மலையில்) கட்டி, பாற்கடல் கடைந்த அத்திருக் கைகளால் சப்பாணி கொட்டவும் ! மேகம்போன்ற நிறமுடையவனே, சப்பாணி கொட்டவும்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment