||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.37
ந சாஸ்ய கஸ்² சிந் நிபுணே ந தா⁴துர்
அவைதி ஜந்து: கும நீஷ ஊதீ:|
நாமாநி ரூபாணி மநோவ சோபி⁴:
ஸந்தந் வதோ நடசர் யாம் இவாஜ்ஞ:||
- கும நீஷ - கெட்ட புத்தியை உடைய
- ஜந்துஹ் கஸ்²சித் ச - எந்த மனிதனும்
- நிபுணேந - தர்க்காதி சாஸ்திர பாண்டித்யத்தால்
- மநோவ சோபி⁴ஹி - மனதினாலும் வாக்கினாலும்
- ரூபாணி - முறையே உருவங்களையும்
- நாமாநி - பெயர்களையும்
- ஸந்தந் வதோ - விஸ்தாரப் படுத்துகின்ற
- தா⁴துர் ஊதீஹி - அந்த இறைவனது லீலைகளை
- அஜ்ஞஹ - அறிவில்லாதவன்
- நடசர் யாம் இவ - நாட்டிய கௌசலத்தை எவ்வாறு அறிவது இல்லையோ அது போல
- ந அவைதி ச - அறிவதே இல்லை
அறிவற்ற ஒருவன் நர்த்தனம் செய்பவனுடைய நடனத்தை நன்கு அறிய முடியாது. அதே போல் தனது இச்சையால் பற்பல திரு உருவங்களை மேற்கொள்பவரும், வாக்கால் வேதமாகிற நாமங்களைப் பரப்புவருமான பகவானது அற்புதமான திருவிளையாடல்களை, தர்க்கம் முதலிய சாஸ்திர பாண்டித்யத்தினால் ஒருவன் அறிய முடியாது. தான் படித்துப் பெற்ற மெத்த அறிவினால், பகவானுடைய தத்துவங்களை ஒருவன் அறிய முடியாது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment