||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 5- இருடீகேசனைப் பாடு
திருப்பல்லாண்டு - ஐந்தாம் பாசுரம்
அண்டக் குலத்துக்கு அதிபதியாகி*
அசுரர் இராக்கதரை*
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த*
இருடிகேசன் தனக்கு*
தொண்டக் குலத்திலுள்ளீர்! வந்தடி தொழுது*
ஆயிரம் நாமம் சொல்லிப்*
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து*
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே|
- இதில் இவ்வுலகத்து இன்பத்தை விரும்பும் ஐச்வர்யார்த்தியை அழைக்கிறார்.
- அண்டக் குலத்துக்கு - அகிலத்திற்கு
- அதிபதி ஆகி - அதிபதி ஆகி
- அசுரர் - அசுரர்களும்
- இராக்கதரை - ராக்ஷஸர்களுமாகிய
- இண்டைக் குலத்தை - நெருக்கமான கூட்டத்தை
- எடுத்துக் களைந்த - நிர்மூலமாக்கின
- இருடீகேசன் தனக்கு - ஹ்ருஷீகேசனான பகவானுக்கு
- தொண்டக் குலத்தில் - அடியவராய் இருப்பவர்களுடைய கோஷ்டியில் சேர்ந்தவர்களே!
- உள்ளீர் வந்து - எங்களோடு சேர்ந்து வந்து
- அடி தொழுது - பகவானுடைய திருவடிகளை ஸேவித்து
- ஆயிரம் - அவனது ஆயிரம்
- நாமம் சொல்லி - நாமங்களையும் துதித்து
- பண்டைக் குலத்தைத் - பழைய தன்மையை
- தவிர்ந்து - நீக்கிக் கொண்டு
- பல்லாண்டு - பல வருஷங்கள்
- பல்லாயிரத்து ஆண்டு - பல ஆயிரம் வருஷங்கள்
- என்மினே - மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டிருங்கள்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment