About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 11 August 2023

திவ்ய ப்ரபந்தம் - 5 - திருப்பல்லாண்டு 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 5- இருடீகேசனைப் பாடு
திருப்பல்லாண்டு - ஐந்தாம் பாசுரம்

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி* 
அசுரர் இராக்கதரை*
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த* 
இருடிகேசன் தனக்கு*
தொண்டக் குலத்திலுள்ளீர்! வந்தடி தொழுது* 
ஆயிரம் நாமம் சொல்லிப்*
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து* 
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே|

  • இதில் இவ்வுலகத்து இன்பத்தை விரும்பும் ஐச்வர்யார்த்தியை அழைக்கிறார். 
  • அண்டக் குலத்துக்கு - அகிலத்திற்கு 
  • அதிபதி ஆகி - அதிபதி ஆகி 
  • அசுரர் - அசுரர்களும் 
  • இராக்கதரை - ராக்ஷஸர்களுமாகிய 
  • இண்டைக் குலத்தை - நெருக்கமான கூட்டத்தை 
  • எடுத்துக் களைந்த - நிர்மூலமாக்கின 
  • இருடீகேசன் தனக்கு - ஹ்ருஷீகேசனான பகவானுக்கு 
  • தொண்டக் குலத்தில் - அடியவராய் இருப்பவர்களுடைய கோஷ்டியில் சேர்ந்தவர்களே! 
  • உள்ளீர் வந்து - எங்களோடு சேர்ந்து வந்து 
  • அடி தொழுது - பகவானுடைய திருவடிகளை ஸேவித்து 
  • ஆயிரம் - அவனது ஆயிரம் 
  • நாமம் சொல்லி - நாமங்களையும் துதித்து 
  • பண்டைக் குலத்தைத் - பழைய தன்மையை 
  • தவிர்ந்து - நீக்கிக் கொண்டு 
  • பல்லாண்டு - பல வருஷங்கள் 
  • பல்லாயிரத்து ஆண்டு - பல ஆயிரம் வருஷங்கள் 
  • என்மினே - மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டிருங்கள்

இப்பாசுரத்தில் ஆழ்வார் கூறும் கருத்து: ஸ்ரீமன் நாராயணனே அகில உலகங்களையும் படைத்து அதை நிர்வஹித்தும் வருகிறான். நம்முடைய வேதங்களும், உபநிஷத்களும் இதையே நமக்கு எடுத்துரைக்கின்றது. அண்டங்களின் கூட்டங்களுக்குத் தலைவனாகி, அஸுர ராக்ஷஸர்களின் நெருங்கின கூட்டத்தைத் திரட்டி, அவர்களை ஒழித்த, ஹ்ருஷீகேசன் எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்கள் குலத்தில் உள்ள நீங்கள், எங்கள் கூட்டத்துக்கு வந்து, எம்பெருமானின் திருவடிகளை வணங்கி, அந்த எம்பெருமானுடைய ஆயிரம் திருநாமங்களையும் வாயாராப் பாடி, எம்பெருமானிடம் சென்று வேறு ப்ரயோஜனங்களைப் ப்ரார்த்தித்துப் பெற்று விலகிப் போகும் பிறப்பைத் தவிர்த்து, மீண்டும் மீண்டும் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment