About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 11 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.2 

த்³ருஷ்ட்வா து பாண்ட³வா நீகம்
வ்யூட⁴ம் து³ர்யோத⁴நஸ் ததா³|
ஆசார்யமுப ஸங்க³ம்ய
ராஜா வசநம ப்³ரவீத்||

  • ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொல்லுகிறார்
  • ததா³ - அப்போது
  • ராஜா து³ர்யோத⁴நஸ் - ராஜாவான துர்யோதனன்
  • பாண்ட³வா நீகம் - பாண்டவர்களின் போர் வீரர்கள்
  • வ்யூட⁴ம் - வியூகமாய் அணிவகுத்து நின்ற படையை
  • த்³ருஷ்ட்வா து - பார்த்து விட்டு
  • ஆசார்யம் - ஆசார்யரான துரோணரை
  • உப ஸங்க³ம்ய - அடைந்து
  • வசனம் அப்³ரவீத் - இந்த வார்த்தைகளை சொல்லலானார்

சஞ்ஜயன் கூறுகிறார்: மன்னரே! பாண்டுவின் மகன்களால் வியூகமாய் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆசார்யர் துரோணரை அணுகிப் பின்வருமாறு கூறினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment