||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 45
ருது: ஸுத³ர்ஸ²ந: கால:
பரமேஷ்டீ² பரிக்³ரஹ:|
உக்³ர: ஸம்வத்ஸரோ த³க்ஷோ
விஸ்²ராமோ விஸ்²வ த³க்ஷிண:||
- 417. ருதுஸ் - அணுகுபவர், தானே வந்து புகுபவர். பருவங்களை ஆளும் காலத்தின் இறைவன்,
- 418. ஸுத³ர்ஸ²நஹ் - பார்வைக்கு இனியவர். அவரது தரிசனம் மோட்சத்திற்கு வழி வகுக்கிறது.
- 419. காலஃ - தன்னிடம் சேர்த்துக் கொள்பவர். அவர் எல்லாவற்றிற்கும் வரம்புகளை அமைக்கிறார். எல்லோருடைய கர்மாவையும் அளந்து பலனைச் செய்பவன்.
- 420. பரமேஷ்டீ² - பரமபதத்தில் உள்ளவர். உச்ச ஸ்தலத்தில் (வைகுந்தம்) வசிப்பவர்.
- 421. பரிக்³ரஹஹ - யாவற்றையும் தன்னுடன் சேர்த்துக் கொள்பவர்.
- 422. உக்³ரஸ் - பகைவர்களிடத்துக் கோபமானவர். அவர் வலிமையானவர்.
- 423. ஸம்வத்ஸரோ - பொருந்தி வாழ்பவர். எல்லா உயிர்களிலும் வசிக்கும் ஒருவர்.
- 424. த³க்ஷோ - விரைந்து செயல்படுபவர்.
- 425. விஸ்²ராமோ - ஓய்வெடுக்கும் இடமாயிருப்பவர்.
- 426. விஸ்²வ த³க்ஷிணஹ - எல்லார்க்கும் நல்லவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment