About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 13 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 75

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 45

ருது: ஸுத³ர்ஸ²ந: கால:
பரமேஷ்டீ² பரிக்³ரஹ:|
உக்³ர: ஸம்வத்ஸரோ த³க்ஷோ
விஸ்²ராமோ விஸ்²வ த³க்ஷிண:||

  • 417. ருதுஸ் - அணுகுபவர், தானே வந்து புகுபவர். பருவங்களை ஆளும் காலத்தின் இறைவன்,
  • 418. ஸுத³ர்ஸ²நஹ் - பார்வைக்கு இனியவர். அவரது தரிசனம் மோட்சத்திற்கு வழி வகுக்கிறது.
  • 419. காலஃ - தன்னிடம் சேர்த்துக் கொள்பவர். அவர் எல்லாவற்றிற்கும் வரம்புகளை அமைக்கிறார். எல்லோருடைய கர்மாவையும் அளந்து பலனைச் செய்பவன். 
  • 420. பரமேஷ்டீ² - பரமபதத்தில் உள்ளவர். உச்ச ஸ்தலத்தில் (வைகுந்தம்) வசிப்பவர்.
  • 421. பரிக்³ரஹஹ - யாவற்றையும் தன்னுடன் சேர்த்துக் கொள்பவர்.
  • 422. உக்³ரஸ் - பகைவர்களிடத்துக் கோபமானவர். அவர் வலிமையானவர்.
  • 423. ஸம்வத்ஸரோ - பொருந்தி வாழ்பவர். எல்லா உயிர்களிலும் வசிக்கும் ஒருவர்.
  • 424. த³க்ஷோ - விரைந்து செயல்படுபவர். 
  • 425. விஸ்²ராமோ - ஓய்வெடுக்கும் இடமாயிருப்பவர்.
  • 426. விஸ்²வ த³க்ஷிணஹ - எல்லார்க்கும் நல்லவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment