||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
015. திருச்சேறை
பஞ்ச ஸார க்ஷேத்ரம் - கும்பகோணம்
பதினைந்தாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 13 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 13 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 11 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1578 - 1587 - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - 10 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1853 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 1 பாசுரம்
2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2707 - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2772 - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
சென்று சென்று செல்வம் செருக்குவார் வாயில் தொறும்*
நின்று நின்று தூங்கும் மட நெஞ்சமே இன் தமிழைக்*
கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே பேறு ஆகச்*
சேறைக்கு நாயகன் பேர் செப்பு*
- செல்வம் செருக்குவார் வாயில்தொறும் - செல்வத்தினால் இறுமாப்புக் கொண்டவரது வீட்டு வாசல்கள் தோறும்
- சென்று சென்று - போய்ப் போய்
- நின்று நின்று - அங்கங்கே நெடு நேரம் நின்று
- தூங்கும் - சோர்வை அடைகின்ற
- மடம் - அறியாமையை உடைய
- நெஞ்சமே - எனது மனமே! நீ
- இன் தமிழை - இனிய தமிழ்ப் பாடலை
- கூறைக்கும் - வஸ்திரத்தின் பொருட்டும்
- சோற்றுக்கும் - சோற்றின் பொருட்டும்
- கூறாது - மநுஷ்யரைப் பாடாமல்
- பேறு ஆக - முத்திப் பயன் கை கூடும்படி
- சேறைக்கு நாயகன் பேர் செப்பு - திருச்சேறை என்னும் திவ்ய ஸ்தலத்திற்குத் தலைவனான எம்பெருமானது திருநாமத்தைப் பாடுவாயாக
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment