About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 13 November 2023

108 திவ்ய தேசங்கள் - 015 - திருச்சேறை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

015. திருச்சேறை 
பஞ்ச ஸார க்ஷேத்ரம் - கும்பகோணம்
பதினைந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 13 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 13 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 11 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1578 - 1587 - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1853 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 1 பாசுரம்

2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2707 - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)

3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2772 - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
சென்று சென்று செல்வம் செருக்குவார் வாயில் தொறும்*
நின்று நின்று தூங்கும் மட நெஞ்சமே இன் தமிழைக்*
கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே பேறு ஆகச்*
சேறைக்கு நாயகன் பேர் செப்பு*

  • செல்வம் செருக்குவார் வாயில்தொறும் - செல்வத்தினால் இறுமாப்புக் கொண்டவரது வீட்டு வாசல்கள் தோறும்
  • சென்று சென்று - போய்ப் போய்
  • நின்று நின்று - அங்கங்கே நெடு நேரம் நின்று
  • தூங்கும் - சோர்வை அடைகின்ற
  • மடம் - அறியாமையை உடைய
  • நெஞ்சமே - எனது மனமே!  நீ
  • இன் தமிழை - இனிய தமிழ்ப் பாடலை
  • கூறைக்கும் - வஸ்திரத்தின் பொருட்டும்
  • சோற்றுக்கும் - சோற்றின் பொருட்டும்
  • கூறாது - மநுஷ்யரைப் பாடாமல்
  • பேறு ஆக - முத்திப் பயன் கை கூடும்படி
  • சேறைக்கு நாயகன் பேர் செப்பு - திருச்சேறை என்னும் திவ்ய ஸ்தலத்திற்குத் தலைவனான எம்பெருமானது திருநாமத்தைப் பாடுவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment