About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 13 November 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.10

பஞ்சம: கபிலோ நாம 
ஸித்³தே⁴ஸ²: கால விப்லுதம்|
ப்ரோவாசா ஸுரயே ஸாங்க்²யம் 
தத்த்வ க்³ராம விநிர்ணயம்||

  • பஞ்சமஹ் - ஐந்தாவதாக
  • ஸித்³தே⁴ஸ²ஹ் - ஸித்தர்களுக்கெல்லாம் ஈசனான
  • கபிலோ நாம - கபிலர் என்று பிரஸித்தவராய்
  • கால விப்லுதம் - காலக்கிரமத்தில் நஷ்டமடைந்த
  • தத்த்வ க்³ராம விநிர்ணயம் - தத்வங்களின் சமூகத்தை நிர்ணயித்து தருவதான
  • ஸாங்க்²யம் - ஸாங்க்யம் என்ற சாஸ்திரத்தை
  • ஆஸுரயே ப்ரோவாச - ஆஸூரி என்ற பிராமணனுக்கு சொன்னார்

ஐந்தாவதாக, சித்தர்களின் தலைவரான கபில வாசுதேவனாகத் திருவவதாரம் செய்து, வெகுகாலமாகி விட்டதால் நலிவடைந்திருந்த தத்துவங்களை நன்கு விளங்குவதான 'ஸாங்க்யம்' என்ற யோகத்தை 'ஆசுரி' என்ற அந்தணனுக்கு உபதேசம் செய்தருளினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment