About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 13 November 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.9

துர்யே த⁴ர்ம கலா ஸர்கே³ 
நர நாராயணா வ்ருஷீ|
பூ⁴த்வாத் மோ பஸ²மோ பேதம்
அகரோத்³ து³ஸ்²சரம் தப:||

  • த⁴ர்ம கலா ஸர்கே³ - தர்மனின் பத்நியின் ஸ்ருஷ்டி ரூபமான
  • துர்யே - நான்காவதான அவதாரத்தில்
  • நர நாராயணௌ - நர நாராயணன் என்ற
  • ருஷீ பூ⁴த்வா - இரு ரிஷிகளாக தோன்றி
  • ஆத்மோ பஸ²மோ பேதம் - ஆத்ம நிக்ரஹத்தோடு கூடியதும்
  • து³ஸ்²சரம் தபஹ - இதரரால் அநுஷ்டிக்க முடியாததுமான தவத்தை
  • அகரோத்³ - செய்தார்

 நான்காவது திருவவதாரமாக, தர்ம பிரஜாபதியின் மனைவியான மூர்த்தி என்பவளிடம் நரன், நாராயணன் என்ற ரிஷிகளாக அவதாரம் செய்து, பிறரால் கடைப்பிடித்து ஒழுக முடியாத மன ஒடுக்கத்தைக் கைக்கொண்டு சிறந்த தவத்தைச் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment