About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 13 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 74

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 44

வைகுண்ட்ட²: புருஷ: ப்ராண:
ப்ராணத³: ப்ரணவ: ப்ருது²:|
ஹிரண்ய க³ர்ப்ப⁴: ஸ²த்ருக்⁴நோ
வ்யாப்தோ வாயுரதோ⁴ க்ஷஜ:||

  • 406. வைகுண்ட்ட²ஃ - தடைகளைப் போக்கித் தன்னிடம் சேர்த்துக் கொள்பவர்.
  • 407. புருஷஃ - தூய்மை அளிப்பவர்.
  • 408. ப்ராண: - உய்விப்பவர், உயிராயிருப்பவர்.
  • 409. ப்ராணத³ஃ - உயிரை அளிப்பவர்.
  • 410. ப்ரணவ: - வணங்கத் தக்கவர்.
  • 411. ப்ருது²ஹு - பெரும் புகழுக்கு உரியவர். நன்கு அறியப்பட்டவர்.
  • 412. ஹிரண்ய க³ர்ப்ப⁴ஸ்² - பொன் புதையலைப் போன்றவவர். அனைவரின் இதயத்தையும் மகிழ்விப்பவர்.
  • 413. ஸ²த்ருக்⁴நோ - பகைவர்களை முடிப்பவர்.
  • 414. வ்யாப்தோ - அன்பு, கருணை போன்றவற்றால் நிரம்பியவர்.
  • 415. வாயுர் - செல்பவன், இருக்கும் இடம் தேடி அருள் புரிபவர். தன் பக்தர்களை நோக்கிச் செல்பவர்.
  • 416. அதோ⁴ க்ஷஜஹ - அநுபவிக்க அனுபவிக்கக் குறையாதவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment