About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 13 November 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.12
 
நத்வே வாஹம் ஜாது நாஸம் 
ந த்வம் நேமே ஜநாதி⁴பா:|
ந சைவ ந ப⁴விஷ் யாம: 
ஸர்வே வய மத: பரம்||

  • ந - என்றுமில்லை 
  • து - ஆனால் 
  • ஏவ - நிச்சயமாக 
  • அஹம் - நான்
  • ஜாது - எக்காலத்திலும் 
  • ந - என்றுமில்லை 
  • ஆஸம் - இருந்து 
  • ந - இல்லை 
  • த்வம் - நீ
  • ந - இல்லை 
  • இமே - இங்குள்ள 
  • ஜநாதி⁴பாஹ - மன்னர்கள் 
  • ந - என்றுமில்லை 
  • ச - மேலும் 
  • ஏவ - நிச்சயமாக 
  • ந - இல்லை 
  • ப⁴விஷ் யாமஹ - இனி இருப்போம் 
  • ஸர்வே வயம் - நாம் அனைவரும் 
  • அதஃ பரம் - இனி மேலும்

நீயோ, நானோ, இம்மன்னர்களோ முன் ஒரு காலத்தில் இல்லாமல் இருந்ததும் இல்லை இனி வரும் காலங்களிலும் இல்லாமல் இருக்க போவதுமில்லை அனைவரும் தனித்துவம் வாய்ந்தவர்களே.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment