About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 25 August 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.3

ய: ஸ்வாநு பா⁴வம் அகி²ல ஸ்ருதி ஸாரம் ஏகம்
அத்⁴யாத்ம தீ³பம் அதிதி தீர்ஷ தாந் தமோ அந்த⁴ம்।
ஸம்ஸாரிணாம் கருணயா ஆஹ புராண கு³ஹ்யம்
தம் வ்யாஸ ஸூநும் உபயாமி கு³ரும் முநீநாம்॥

  • ஸ் - எந்த ஸுகர் 
  • அந்த⁴ம் தமோ - மிகவும் இருட்டாகிய பிறவி கடலை 
  • அதிதி தீர்ஷ தாம் - கடக்க விரும்புகின்றவர்களுக்கு 
  • அத்⁴யாத்ம தீ³பம் - ஆத்ம ஞானத்தை நேரில் விளக்குகிறதும் 
  • ஸ்வாநு பா⁴வம் - அஸாதாரணமான பிரபாவத்தை உடையதும் 
  • அகி²ல ஸ்ருதி ஸாரம் - எல்லா வேதங்களுக்கும் ஸாரமானதும் 
  • ஏகம் - அத்வீதியமானதும் 
  • புராண கு³ஹ்யம் - புராணங்களில் மிகவும் ரகசியமானதுமான ஸ்ரீமத் பாகவதத்தை 
  • ஸம்ஸாரிணாம் - ஸம்சாரிகளுக்கு 
  • கருணயா - கருணை பெருக்கால் 
  • ஆஹ - சொன்னாரோ 
  • தம் - அப்படிப்பட்ட 
  • முநீநாம் - மகரிஷிகளுக்கெல்லாம் 
  • கு³ரும் - குருவான 
  • வ்யாஸ ஸூநும் - வ்யாசரின் புத்திரரான ஸ்ரீ ஸுகரை 
  • உபயாமி - சரணமாக அடைகிறேன் 

பிறவிக்கடல் என்னும் பேரிருளைக் கடக்க இச்சை கொண்டவர்களுக்கும், வீடு வாசல் என்கிற சம்சார பந்தத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கும், அவர்களிடம் கொண்ட கருணையால் ஒப்புயர்வற்ற பெருமையுடையதும், உண்மைப் பொருளான ஆன்ம ஞானத்தை நன்கு விளக்குவதும், நால்வேதப் பொருளானதும், புராணங்களில் மிகவும் ரகசியமானதுமான இந்த ஸ்ரீமத் பாகவதத்தைக் கூறிய முனிவர்களுக்கெல்லாம் குருவான வியாசரின் புதல்வரான ஸ்ரீசுக மகரிஷியைச் சரணமாக அடைகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment