About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 25 August 2023

108 திவ்ய தேசங்கள் - 004 - திருவெள்ளறை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

004. திருவெள்ளறை
ஸ்வேதகிரி – திருச்சி
நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் – 24 பாசுரங்கள்

1. பெரியாழ்வார் - 11 பாசுரங்கள்
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 71 – முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 192 - 201 - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்

------------
2. திருமங்கையாழ்வார் - 13 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1368 - 1377 - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1851 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம் - 1  பாசுரம்                                                                         
2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2773 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் - (71)
---------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
கல் இருந்தான் தந்தை கமலத்தோன் 
அக்கமலத்தில் இருந்தான் தந்தை அரங்கேசன் 
என்றே தொல்லை மறை உள் அறையா நின்றமையால் 
உள்ளமே கள்ளம் இன்றி வெள்ளறையான் தானே விரும்பு

  • உள்ளமே - எனது மனமே! 
  • கல் இருந்தான் தந்தை - கைலாச மலையில் இருப்பவனாகிய சிவபெருமானது திருத்தந்தை
  • கமலத்தோன் - திருமாலினது நாபித் தாமரையில் தோன்றியவனாகிய பிரம்மனாவன்
  • அக் கமலத்தில் இருந்தான் தந்தை - அந்தத் தாமரை மலரில் வாழ்பவனாகிய பிரம்மனது திருத்தந்தை
  • அரங்கேசன் - திருவரங்கநாதனாவன் என்று 
  • தொல்லை மறையுள் அறையா நின்றமையால் - பழமையாகிய வேதங்களில் சொல்வதனால்
  • கள்ளம் இன்றி - கபடம் இல்லாமல்,
  • வெள்ளறையான் தாளே - திருவெள்ளறை என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவடிகளையே
  • விரும்பு - விரும்பிச் சேர்வாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment