About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.5

த ஏகதா³ து முநய꞉ ப்ராதர் 
ஹுத ஹுதாக்³ நய꞉|
ஸத் க்ருதம் ஸூதமா ஸீநம் 
பப்ரச்சு²ரித³ மாத³ ராத்||

  • ஏகதா³ - ஓர் சமயம்
  • ப்ராதர் - ப்ராத காலத்தில்
  • த முநயஹ து - அந்த மகரிஷிகள் ஓ எனில்
  • ஹுத ஹுதாக்³ நயஹ - நித்ய நைமித்திக காரியங்களின் பொருட்டு ஹோமம் செய்யப்பட்ட அக்னியை உடையவர்களாய்
  • ஸத் க்ருதம் - நன்கு உபசரிக்கப்பட்டு
  • ஆஸீநம் - அமர்ந்திருப்பவரான
  • ஸூதம் - ஸூத மஹரிஷியை
  • ஆத³ராத் - அன்போடு கூட
  • இத³ம் - மேற்சொல்லப் போவதை
  • பப்ரச்சு²ர் - கேட்டனர்

ஒரு நாள் காலை, மரியாதை நிமித்தமாக முனிவர்கள் யாகத் தீயை எரித்துக் கொண்டு இருந்தனர். அங்கு அமர்ந்திருந்த ஸ்ரீல சுகதேவ கோ ஸ்வாமியிடம் இது குறித்து உரிய மரியாதையுடன் பின்வருமாறு வினவினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment