About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 10 January 2024

லீலை கண்ணன் கதைகள் - 85

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பீமன் ஜராசந்தனின் போர்|

இரண்டு கதாயுதங்கள் கொண்டு வரும்படி ஜராசந்தன் உத்தரவிட்டான். ஒன்றைப் பீமனுக்குக் கொடுத்தான். இன்னொன்றைத் தான் வைத்துக் கொண்டான். இருவரும் வெளியே திறந்தவெளிக்கு வந்து சண்டையிடத் தொடங்கினார்கள்.


இருவரும் சரமாரியாகச் சண்டையிட்டனர். விருப்பத்துடன் சண்டையிட்டனர். வைரத்தைப் போன்று உறுதியாக இருந்த கதாயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். வெகு லாவகமாக, இடப்பக்கமும் வலப்பக்கமும் வளைந்து கொடுத்துச் சண்டை இட்டார்கள். மேடையில் நடிகர்கள் போன்று அவர் தூகாக் கொண்டிருந்த போது கிளம்பிய சப்தம் இரண்டு யானைகள் தங்கள் தந்தங்களால் தாக்கிக்கொள்ளும் பொழுது ஏழும் சப்தத்தை ஒத்திருந்தது, இரண்டு கருமேகங்கள் இடித்துக் கொண்டு எழுப்பும் இடி முழக்கதைப் போன்று இருந்தது. 

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அதனால் சண்டைக்கு முடிவே இருக்காது என்று தோன்றியது. கடைசியில் கதாயுதங்கள் ஒன்றுக்கொன்று மோதித் துண்டு துண்டாகவே, அவர்கள் மல்யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். 

இப்படி இருபத்தேழு நாட்கள் சென்றன. இருவரும் நடந்து கொண்ட விதம் வெகு விசித்திரமாக இருந்தது. பகலில் இருவரும் மிகவும் உக்கிரமாகச் சண்டை போடுவார்கள். இரவானால், நண்பர்களைப் போல சேர்ந்து உட்கார்ந்து உணவருந்துவார்கள். 

இருபத்தெட்டாம் நாளன்று, பீமன் கிருஷ்ணரைப் பார்த்து, "இதோ பார், கிருஷ்ணா! என்னால் ஜராசந்தனை வெற்றி கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. எல்லா அம்சங்களிலும் அவன் எனக்குச் சரிநிகராக இருக்கிறான். அதனால் சண்டை ஓயாமல் போய்க் கொண்டேயிருக்கும் போலத் தோன்றுகிறது" என்று சொன்னான். கிருஷ்ணர் அவனுக்குத் தைரியம் கொடுத்து, "கவலைப்படாதே பீமா, இன்று நீ அவனை கொல்லுவாய் பார்" என்று சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment