About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 10 January 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.30

ஏதத்³ ரூபம் ப⁴க³வதோ
ஹ்ய ரூபஸ்ய சிதா³த் மந:|
மாயா கு³ணைர் விரசிதம் 
மஹதா³ தி³பி⁴ராத் மநி||

  • அரூபஸ்ய - உருவமற்றவரும் 
  • சிதா³த் மநஹ - சித் ஸ்வரூபனுமான ஜீவனுக்கு 
  • ஏதத்³ ரூபம் - இந்த உருவம் ஸ்தூல ப்ரபஞ்சம் 
  • ப⁴க³வதோ - பகவானான இறைவனது 
  • மாயா கு³ணைர் - மாயா குண ஸ்வரூபமான 
  • மஹதா³ தி³பி⁴ர் - மஹத ஹங்காராதிகளால் உண்டாக்கப்பட்டு 
  • ஆத்மநி - ஆத்ம ஸ்தானத்தில் பகவானிடத்திலேயே 
  • விரசிதம் - உண்டாக்கப்பட்டது

உருவமற்றவனும் ஞான ஸ்வரூபனுமான பகவானுக்கு ஸ்தூலமான வெளியில் தெரிகின்ற இந்த உலகமாகிற உருவம், பகவானது மாயையின் குணங்களான, 'மஹத் தத்துவம், அஹங்காரத் தத்துவம்' முதலியவைகளால் பகவான் மேல் கற்பித்துக் கூறப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment