About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 6 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 81 வார்த்தைகள்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

81 வார்த்தைகள்

  • 1 அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே| 
  • 2 அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே|
  • 3 தேஹத்தை விட்டேனோ ருஷி பத்நியைப் போலே|
  • 4 தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே|
  • 5 பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே|
  • 6 பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே|
  • 7 தாய்க்கோலஞ் செய்தேனோ அநஸூயைப் போலே|
  • 8 தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே|
  • 9 மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே|
  • 10 முதலடியைப் பெற்றேனோ அஹலிகையைப் போலே|
  • 11 பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே|
  • 12 எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே|
  • 13 ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையாரைப் போலே|
  • 14 அவன் சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே|
  • 15 ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே|
  • 16 யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே|
  • 17 அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே|
  • 18 அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே|
  • 19 அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே|
  • 20 அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே|
  • 21 தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியாரைப் போலே|
  • 22 தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே|
  • 23 ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே|
  • 24 ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே|
  • 25 அநுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே|
  • 26 அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே|
  • 27 ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே|
  • 28 அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே|
  • 29 கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே|
  • 30 கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப் போலே|
  • 31 குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வானைப் போலே|
  • 32 கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே|
  • 33 இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவானைப் போலே|
  • 34 இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே|
  • 35 இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே|
  • 36 இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியாரைப் போலே|
  • 37 அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியாரைப் போலே|
  • 38 அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே|
  • 39 அனுப்பி வைய்யும் என்றேனோ வசிஷ்டரைப் போலே|
  • 40 அடி வாங்கினேனோ கொங்கிற் பிராட்டியைப் போலே|
  • 41 மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே|
  • 42 மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே|
  • 43 பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே|
  • 44 பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே|
  • 45 வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே|
  • 46 வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே|
  • 47 அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே|
  • 48 அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே|
  • 49 இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே|
  • 50 இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே|
  • 51 இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே|
  • 52 இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே|
  • 53 காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே|
  • 54 கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே|
  • 55 இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே|
  • 56 இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே|
  • 57 இரு மிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே|
  • 58 நில் என்று பெற்றேனோ இடையற்றூர்குடி நம்பியைப் போலே|
  • 59 நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே|
  • 60 அவன் போனான் என்றேனோ மாருதியாண்டானைப் போலே|
  • 61 அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே|
  • 62 அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே|
  • 63 அருள் ஆழங்கண்டேனோ நல்லானைப் போலே|
  • 64 அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே|
  • 65 ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே|
  • 66 அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே|
  • 67 அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே|
  • 68 கள்வன் இவன் என்றேனோ லோககுருவைப் போலே|
  • 69 கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே|
  • 70 சுற்றி கிடந்தேனோ திருமாலையாண்டானை போலே|
  • 71 சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூராரைப் போலே|
  • 72 உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே|
  • 73 உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே|
  • 74 என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே|
  • 75 யான் சிறியேன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே|
  • 76 நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே|
  • 77 நீரோருகம் கொண்டேனோ காசி சிங்கனைப் போலே|
  • 78 வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே|
  • 79 வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே|
  • 80 தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே|
  • 81 துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment