About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 6 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - அறிமுகம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தையில் உள்ளது 18 அத்யாயங்கள்.

முதலில் கீதை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அதன் காரணங்கள் ஆன கதை மிகவும் அவசியம். அதன் பிறகு அதன் ஸ்லோகங்கள், அதன் விளக்கம் பற்றி பார்ப்போம். ரொம்ப பேருக்கு, கீதை என்றால் அதன் ஸ்லோகங்கள் பற்றி தான் தெரியும். அதன் முன் கதை பற்றி பல பேருக்கு தெரியாதது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரம் நோக்கமே ஸ்ரீமத் பகவத் கீதை தான். ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ளது 18 அத்யாயங்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25ம் அத்யாயம் தொடக்கமாக 42ம் அத்யாயம் முடிய பதினெட்டு அத்யாயங்கள் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீமத் பகவத் கீதையின் பகுதிகள் 1 முதல் 6 வரை கர்ம யோகமும், 7 முதல் 12 வரை பக்தி யோகமும், 13 முதல் 18 வரை ஞான யோகமும் முக்கியப் பொருளாகப் பேசப் படுகின்றன.


கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளன. சில பதிப்புகளில் 711 சுலோகங்களும் உண்டு. ஒவ்வொரு பகுதியும் யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சவுணர்வுடன் தனிப்பட்ட உணர்வை இணைக்கும் அறி்வே யோகமாகும்.

இவற்றில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதாக 574 ஸ்லோகங்கள், அர்ஜுனன் பேசுவது 84, ஸஞ்ஜயன் பேசுவது 41, ஒரே ஒரு ஸ்லோகம். திருதராஷ்டிரன் சொல்வதாக உள்ளது. 

பாரதம் ஐந்தாவது வேதம் (பாரத: பஞ்சமோ வேத:), என்பது வழக்கு. வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவாகப் பிரிக்கப் படுகிறது. இதில் ஞான காண்டம், ஆத்மாவைக் குறித்த ஆராய்ச்சிகள் இடம் பெரும். ஞான காண்டத்துக்கு உபநிஷத் என்றும் பெயர் உண்டு. அதே போல பாரதத்தில் ஞான காண்டமாக கீதை விளங்குகிறது. கீதையை ஓதினால் உபநிஷதங்கள் அனைத்தையும் கற்ற பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கி.மு 3067 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உன்னதமான நிகழ்ச்சியை தெரிந்துக் கொள்வதன் மூலம் தர்மத்தின் வழி நடப்பது எவ்வாறு என்பதையும் அதன் உன்னதம் எத்தகையது என்பதையும் அதனால் நாம் எத்தகைய நல்ல உன்னதமான கதியை அடைவோம் என்பது பற்றியும் அறியலாம்.  


ஸ்ரீமத் பகவத் கீதையை ஸ்ரீ கிருஷ்ணரின் மூலம் அர்ஜுனன் தெரிந்து கொண்டான். அதை எழுதி வைத்த வியாச முனிவர் மூலம் நாம் இன்றும் அதை படித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று இருக்கிறோம் .

கீதை 18 அத்யாயங்களைக் கொண்டது. இதில் கடவுளை அடையும் 18 முறைகள் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு ஸ்ரீசங்கரர், ஸ்ரீ ராமனுஜர், ஸ்ரீ மத்வர் போன்ற சமயாச்சார்யார்கள் வியாக்யானம் எழுதியுள்ளனர். 

ஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்து, தெரிந்திருக்க வேண்டிய நூல் பகவான் கிருஷ்ணர் அருளிய கீதை இந்துக்களின் வேத நூல் ஆகும். 

ஸ்ரீமத் பகவத் கீதையை பகவத் கீதா என்று சொல்வதும் வழக்கம். பகவத் என்றால் இறைவன். கீதா என்றால் நல்ல உபதேசம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது தாகீ என்று மாறும். தாகீ என்றால் தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் கீதா விற்குரிய ஆழமான பொருளாகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment