About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 6 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - அறிமுகம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால் தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்யாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

  • காமம் - பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
  • குரோதம் - கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
  • லோபம் - பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
  • மதம் - யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்து விடுவான்.
  • மாத்ஸர்யம் - மனதில் பொறாமையை நிலை நிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்து விடும்.
  • டம்பம் (வீண் பெருமை) - அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
  • அகந்தை - தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
  • சாத்வீகம் - விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
  • ராஜஸம் - அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
  • தாமஸம் - அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
  • ஞானம் - எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
  • மனம் - நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
  • அஞ்ஞானம் - உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
  • கண் - ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
  • காது - ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
  • மூக்கு - ஆண்டவனின் சந்நதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
  • நாக்கு - கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
  • மெய் - இரு கரங்களால் இறைவனை கை கூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சந்நதிக்கு நடந்து செல்ல வேண்டும். ஆண்டவனை விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.

ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டு அத்யாயங்களை மூன்று பகுதிகளாக (ஷட்கம்) பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் ஆறு அத்யாயங்கள் கொண்டுள்ளது. 

  • முதல் பகுதியில் (முதல் 6 வரை உள்ள அத்யாங்கள்) ஜீவனின் தத்துவம், கர்ம யோகம் மற்றும் சுய முயற்சி குறித்து விளக்கப்படுகிறது. 
  • இரண்டாம் பகுதியில் (முதல் 12 வரை உள்ள அத்யாயங்கள்) ஈஸ்வர தத்துவம், பக்தி யோகம் மற்றும் ஈஸ்வர அநுக்ரகம் குறித்து விளக்கப்படுகிறது. 
  • மூன்றாம் பகுதியில் (முதல் 18 வரை உள்ள அத்யாயங்கள்) ஜீவ - ஈஸ்வர ஐக்கியம் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் என்ற அத்வைத ஞானம்), ஞான யோகம் மற்றும் நற்பண்புகள் குறித்து விளக்கப்படுகிறது

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment