About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 1 April 2024

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.69

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.69 

யா நிஸா² ஸர்வ பூ⁴தாநாம் 
தஸ்யாம் ஜாக³ர்தி ஸம்யமீ |
யஸ்யாம் ஜாக்³ரதி பூ⁴தாநி 
ஸா நிஸா² பஸ்²யதோ முநே:||

  • யா - எது 
  • நிஸா² - இரவோ 
  • ஸர்வ - எல்லாம் 
  • பூ⁴தாநாம் - உயிர்வாழிகளுக்கு 
  • தஸ்யாம் - அதில்  
  • ஜாக³ர்தி - விழித்திருக்கிறான்  
  • ஸம்யமி - சுயக் கட்டுபாடு உள்ளவன்  
  • யஸ்யாம் - எதில் 
  • ஜாக்³ரதி - விழித்திருக்கின்றன 
  • பூ⁴தாநி - எல்லா உயிர்களும் 
  • ஸா - அதுவே 
  • நிஸா² - இரவு 
  • பஸ்²யதோ - ஆய்ந்து உண்மையை உணர்ந்த  
  • முநேஹே - முனிவன்

புலன்களை வென்ற யோகிக்கு உலகக் காட்சிகள், உலக விஷயங்கள் எல்லாம் இருள் போன்று மறைந்து கிடக்கின்றன். பரமாத்ம தத்துவ சம்பந்தமான யாவும் பகல் போன்று அவனுக்கு விளங்குகின்றன. புலன் இன்பங்களில் நாட்டம் உடையவர்களுக்கு உலக காட்சி பகல். புலன்களை அடக்கிய யோகிக்கு இறைக்காட்சி பகல். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment