About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 1 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 132

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 102

ஆதா⁴ர நிலயோ தா⁴தா 
புஷ்ப ஹாஸ: ப்ரஜாக³ர:|
ஊர்த்⁴ வக³ஸ் ஸத்ப தா²சார: 
ப்ராணத³: ப்ரணவ: பண:||

  • 950. ஆதா⁴ர நிலயோ - சாதுக்களுக்கு இருப்பிடமானவர். தங்கள் நீதியான செயல்களால் உலகை ஆதரிப்பவர்களின் இருப்பிடம்.
  • 951. தா⁴தா - தர்மத்தை உபதேசிப்பவர். படைப்பவர்.
  • 952. புஷ்ப ஹாஸஃ - மலர்கின்ற மலரைப் போலும் இனியவர். ஒரு பூவைப் போல பூக்கிறார்.
  • 953. ப்ரஜாக³ரஹ - பக்தர்களின் பாதுகாப்பிற்காக இரவும் பகலும் விழித்திருப்பவர்.
  • 954. ஊர்த்⁴ வக³ஸ் - மிகவும் உயர்ந்தவர். எல்லாவற்றிற்கும் மேலானவர்.
  • 955. ஸத்ப தா²சாரஃ - பிறரை நல்வழிப்படுத்துபவர். 
  • 956. ப்ராணத³ஃ - உயிரளிப்பவர். 
  • 957. ப்ரணவஃ - தனது திருவடிகளைத் தொழுது எழச் செய்பவர். அவர் பிரணவ மந்திரத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார்.
  • 958. பணஹ - நிலை மாற்றம் செய்பவர். தலைவனாக உள்ள தான் அடியவனாக இருந்து மகிழ்பவர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment