||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
033. திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
முப்பத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1228 - 1237 - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
வணங்கேன் பிற தெய்வம் மால் அடியார் அல்லாக்*
குணங்கேடர் தங்களுடன் கூடேன் இணங்கி நின்று*
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவேன் ஈது அன்றோ*
வைகுந்த விண்ணகர வாழ்வு*
- பிற தெய்வம் – திருமால் அல்லாத வேறு தெய்வங்களை
- வணங்கேன் – நான் வணங்க மாட்டேன்
- மால் அடியார் அல்லா – திருமாலினது அடியவர் அல்லாத
- குணம் கேடர்தங்களுடன் – நற்குணம் இல்லாதவரோடு
- கூடேன் – சேர மாட்டேன்
- இணங்கிநின்று – திருமால் அடியாருடன் கூடி நின்று
- வைகுந்த விண்ணகரம் – திருவைகுந்த விண்ணகரம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
- வாழ்த்துவேன் – துதிப்பேன்
- ஈது அன்றோ – இவ்வாறு அடியவருடன் கூடித் துதித்தல் அல்லவோ
- வைகுந்த விண் நகரம் வாழ்வு – ஸ்ரீ வைகுண்டம் என்னும் திவ்ய நகரத்தில் உண்டாகின்ற நல்வாழ்க்கையாவது
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment