About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 1 April 2024

108 திவ்ய தேசங்கள் - 033 - திருவைகுந்த விண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

033. திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
முப்பத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1228 - 1237 - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

வணங்கேன் பிற தெய்வம் மால் அடியார் அல்லாக்*
குணங்கேடர் தங்களுடன் கூடேன் இணங்கி நின்று*
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவேன் ஈது அன்றோ*
வைகுந்த விண்ணகர வாழ்வு*

  • பிற தெய்வம் – திருமால் அல்லாத வேறு தெய்வங்களை
  • வணங்கேன் – நான் வணங்க மாட்டேன்
  • மால் அடியார் அல்லா – திருமாலினது அடியவர் அல்லாத
  • குணம் கேடர்தங்களுடன் – நற்குணம் இல்லாதவரோடு
  • கூடேன் – சேர மாட்டேன்
  • இணங்கிநின்று – திருமால் அடியாருடன் கூடி நின்று
  • வைகுந்த விண்ணகரம் – திருவைகுந்த விண்ணகரம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
  • வாழ்த்துவேன் – துதிப்பேன்
  • ஈது அன்றோ – இவ்வாறு அடியவருடன் கூடித் துதித்தல் அல்லவோ
  • வைகுந்த விண் நகரம் வாழ்வு – ஸ்ரீ வைகுண்டம் என்னும் திவ்ய நகரத்தில் உண்டாகின்ற நல்வாழ்க்கையாவது

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment