About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 1 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 131

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 101

அநாதி³ர் பூ⁴ர்பு⁴வோ லக்ஷ்மீஸ் 
ஸுவீரோ ருசி ராங்க³த³:|
ஜநநோ ஜந ஜந்மாதி³ர் 
பீ⁴மோ பீ⁴ம பராக்ரம:||

  • 941. அநாதி³ர் -  பிரமன், ருத்ரன் முதலானோரால் பகவான் அறியப்படாதவர். ஆரம்பம் இல்லாதவர்.
  • 942. பூ⁴ர்பு⁴வோ - உண்மையாக வாழ்பவர் உள்ளத்து இருப்பிடமாக உள்ளவர். அனைவரையும் ஆதரிப்பவர்.
  • 943. லக்ஷ்மீஸ் - தானே எல்லாவிதச் செல்வமாக உள்ளவர்.
  • 944. ஸுவீரோ - சிறந்த வீரம் உள்ளவர். பெரும் வீரம் கொண்டவர்.
  • 945. ருசி ராங்க³த³ஹ - தனது அழகான திருமேனியை அநுபவிக்குமாறு அடியார்களுக்குத் தருபவர்.
  • 946. ஜநநோ - பிறப்பிப்பவர். படைப்பாளர்.
  • 947. ஜந ஜந்மாதி³ர் - பிறவிப் பயனாக உள்ளவர். எல்லா உயிர்களுக்கும் மூல காரணமானவர்.
  • 948. பீ⁴மோ - பயங்கரன். தர்மத்தை பின்பற்றாதவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துபவர்.
  • 949. பீ⁴ம பராக்ரமஹ - பயங்கரமான பராக்ரமம் உடையவர். பயங்கர சக்திகளைக் கொண்டவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment