About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 1 April 2024

திவ்ய ப்ரபந்தம் - 108 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 108 - கோவிந்தன் என்னை கட்டிக் கொள்வான்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்

வட்டு நடுவே* வளர்கின்ற* 
மாணிக்க மொட்டு நுனையில்* முளைக்கின்ற முத்தே போல்* 
சொட்டுச் சொட்டு என்னத்* துளிக்கத் துளிக்க* 
என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான்* 
கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்| (2)

  • என் குட்டன் - என் பிள்ளை
  • வட்டு நிடுவே - இரண்டு நீல ரத்ந வட்டுகளின் நிடுவே
  • வளர்கின்ற - வளர்த்துக் கொண்டிருப்பதான
  • மாணிக்கம் - இந்திர நீலமயமான 
  • மொட்டு - அரும்பினுடைய
  • நுனையில் - நுனியில்
  • முளைக்கின்ற - உண்டாகின்ற
  • முத்தே போல் - முத்துக்கள் போன்று
  • சொட்டு சொட்டு என்ன - அம்மாணிக்க மொட்டு சொட்டுச் சொட்டென்ற ஓசை உண்டாகும்படி
  • துளிர்க்க துளிர்க்க - பல தரம் துளியா நிற்க
  • வந்து - ஓடி வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • கோவிந்தன் - கண்ணன்
  • என்னைப் என்னுடைய
  • புறம் புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

ஒரு மாணிக்க மொட்டின் நுனியில் முத்துக்கள் முளைப்பது போல் குழந்தையான கண்ணனின் குறியிலிருந்து சொட்டு சொட்டாக சிறுநீர் துளிர்க்கிறதாம்! இந்த நிலையிலேயே கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! கோவிந்தன் கண்ணன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment