About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 December 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.21 

வேதா³ விநாஸி² நம் நித்யம் 
ய ஏந மஜமவ் யயம்|
கத²ம் ஸ புருஷ: பார்த² 
கம் கா⁴த யதி ஹந்தி கம்||

  • வேத³ - அறிந்த 
  • ஆவிநாஸி²நம் - அழிவற்றவன் 
  • நித்யம் - நித்தியமானவன் 
  • ய - யாரொருவன் 
  • ஏநம் - இந்த ஆத்மா
  • அஜம் - பிறப்பற்றவன் 
  • அவ்யயம்- மாற்றமில்லாதவன் 
  • கத²ம் - எப்படி 
  • ஸ - அந்த 
  • புருஷஃ - நபர் 
  • பார்த² - பார்த்தனே (அர்ஜுநனே) 
  • கம் - யாரை 
  • கா⁴தயதி - துன்புறுத்தக் காரணம் 
  • ஹந்தி - கொலை புரிவது 
  • கம் - யாரை

அர்ஜுநா! இந்த ஆன்மா ஒரு போதும் பிறந்ததில்லை, இறந்ததுமில்லை, உண்டாகி மீண்டும் இல்லாமல் போவதும் இல்லை. இது பிறப்பற்றது இறப்பற்றது நிலையானது, பழமையானது. ஆதலால் உடம்பு கொல்லப்பட்டாலும் ஆன்மா கொல்லப் படுவதில்லை. இதனை உணர்ந்தவன் கொல்வது எதனை? கொல்விப்பது எதனால்? 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment