About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 11 October 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.42

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.42 

ஸங்கரோ நரகாயைவ 
குலக்⁴நா நாம் குலஸ்ய ச|
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் 
லுப்த பிண்டோ³ த³கக்ரியா:||

  • ஸங்கரோ - அத்தகு குழப்பத்தால்
  • நரகாய - நரகத்துக்கே கொண்டு செல்கிறது 
  • ஏவ - நிச்சயமாக 
  • குலக்⁴நாநாம் - குலநாசம் செய்தவர்களின் 
  • குலஸ்ய - குலத்தையும் 
  • ச - மேலும் 
  • பதந்தி - இழிவடைகின்றனர் 
  • பிதரோ- முன்னோர் 
  • ஹி - நிச்சயமாக 
  • ஏஷாம் - அவர்களின் 
  • லுப்த - நின்று 
  • பிண்ட³ - பிண்டம் 
  • உதக - நீர் 
  • த³கக்ரியா ஹ - கருமம் (சடங்கு) 

ஜாதி கலப்பினால், குலத்தை அழித்தவர்களுக்கும் குலத்தினருக்கும் நரகமே கிடைக்கிறது. அவர்களுடைய முன்னோர்களுக்கு பிண்டமும், நீரும் வைத்து வணங்கும் கரும நிகழ்வுகள் நடப்பதில்லை. இதனால் அவர்கள் இழிவடைகின்றனர்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment