||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.10
காமஸ்ய நேந்த்³ரிய ப்ரீதிர்
லாபோ⁴ ஜீவேத யாவதா।
ஜீவஸ்ய தத்த்வ ஜிஜ் ஞாஸா
நார்தோ² யஸ்² சேஹ கர்மபி:⁴॥
- காமஸ்ய - இச்சைக்கு
- இந்த்³ரிய ப்ரீதிர் - இந்திரியங்களின் திருப்தியானது
- லாபோ⁴ ந - பலமாக ஆவதில்லை
- யாவதா ஜீவேத - எவ்வளவு நாள் ஜீவித்திருக்கிறானோ அவ்வளவு நாள் தான் அந்த திருப்தி
- ஜீவஸ்ய ச - ஜீவனுக்கு
- தத்த்வ ஜிஜ் ஞாஸா - பிரம்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற விருப்பம் இருத்தல் வேண்டும்
- இஹ கர்மபி⁴ஹி - ப்ரஸித்தமான கர்ம அனுஷ்டானாதிகளால் ஏற்படும்
- யஸ்²அர்தோ² ந - யாதொரு ஸ்வர்காதிகள் உண்டோ அவையும் பயனன்று
போகம் அனுபவிப்பது புலன் இன்பத்திற்காக அல்ல வாழ்க்கையைச் சரிவர நடத்துவதற்கே ஆகும். வாழ்க்கையின் லட்சியம் பகவானை அறிந்து பக்தி செய்வதே. அதாவது, பகவானை அறிந்து கொள்ள விருப்பமுள்ளவனுக்கு, பயனில் பற்று வைத்து செய்யப்படும் கர்மங்கள் செய்யமாட்டா. உண்மையான பக்தியினால் மட்டுமே அடைய முடியும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment