||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
006. திருப்பேர் நகர்
கோவிலடி – திருச்சி
ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 33 - 2
திருமங்கையாழ்வார்
021. திவ்ய ப்ரபந்தம் - 2706 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2)
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே*
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்*
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| (2)
022. திவ்ய ப்ரபந்தம் - 2774 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - (62)
வல்லவாழ்ப் பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை*
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை*
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை*
மன்னும் கடல்மல்லை மாயவனை|
நம்மாழ்வார்
023. திவ்ய ப்ரபந்தம் - 3860 - திருமாலின் திருவருளைப் பாராட்டுதல்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்
திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*
திருமால் வந்து* என் நெஞ்சு நிறையப் புகுந்தான்*
குரு மா மணி உந்து புனல்* பொன்னித் தென்பால்*
திருமால் சென்று சேர்விடம்* தென் திருப்பேரே| (2)
024. திவ்ய ப்ரபந்தம் - 3861 - உலகுண்டானை முழுவதும் பிடித்து விட்டேன்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - இரண்டாம் பாசுரம்
பேரே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
பேரேன் என்று* என் நெஞ்சு நிறையப் புகுந்தான்*
கார் ஏழ் கடல் ஏழ்* மலை ஏழ் உலகு உண்டும்*
ஆரா வயிற்றானை* அடங்கப் பிடித்தேனே|
025. திவ்ய ப்ரபந்தம் - 3862 - திருப்பேரான் அடிச் சேர்வது எனக்கு எளியது
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - மூன்றாம் பாசுரம்
பிடித்தேன் பிறவி கெடுத்தேன்* பிணி சாரேன்*
மடித்தேன் மனை வாழ்க்கையுள்* நிற்பது ஓர் மாயையை*
கொடிக் கோபுர மாடங்கள் சூழ்* திருப்பேரான்*
அடிச் சேர்வது எனக்கு* எளிது ஆயினவாறே|
026. திவ்ய ப்ரபந்தம் - 3863 - திருப்பேரான் எனக்க வைகுந்தம் தருவான்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - நான்காம் பாசுரம்
எளிதாயினவாறு என்று* என் கண்கள் களிப்பக்*
களிது ஆகிய சிந்தையனாய்க்* களிக்கின்றேன்*
கிளி தாவிய சோலைகள் சூழ்* திருப்பேரான்*
தெளிது ஆகிய* சேண் விசும்பு தருவானே|
027. திவ்ய ப்ரபந்தம் - 3864 - தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் திருமால்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஐந்தாம் பாசுரம்
வானே தருவான்* எனக்கா என்னோடு ஒட்டி*
ஊன் ஏய் குரம்பை* இதனுள் புகுந்து*
இன்று தானே தடுமாற்ற* வினைகள் தவிர்த்தான்*
தேன் ஏய் பொழில்* தென் திருப்பேர் நகரானே|
028. திவ்ய ப்ரபந்தம் - 3865 - திருமால் என மனத்தில் புகுந்தான் அமுதாக இனித்தது
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஆறாம் பாசுரம்
திருப்பேர் நகரான்* திருமாலிருஞ்சோலை*
பொருப்பே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
இருப்பேன் என்று* என் நெஞ்சு நிறையப் புகுந்தான்*
விருப்பே பெற்று* அமுதம் உண்டு களித்தேனே|
029. திவ்ய ப்ரபந்தம் - 3866 - திருமால் என் கண்ணை விடுத்து அகல மாட்டாள்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஏழாம் பாசுரம்
உண்டு களித்தேற்கு* உம்பர் என் குறை*
மேலைத் தொண்டு உகளித்து* அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*
வண்டு களிக்கும் பொழில் சூழ்* திருப்பேரான்*
கண்டு களிப்ப* கண்ணுள் நின்று அகலானே?
030. திவ்ய ப்ரபந்தம் - 3867 - ஏழிசையின் சுவையே திருமால்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - எட்டாம் பாசுரம்
கண்ணுள் நின்று அகலான்* கருத்தின் கண் பெரியன்*
எண்ணில் நுண் பொருள்* ஏழ் இசையின் சுவை தானே*
வண்ண நல் மணி மாடங்கள் சூழ்* திருப்பேரான்*
திண்ணம் என் மனத்துப்* புகுந்தான் செறிந்து இன்றே|
031. திவ்ய ப்ரபந்தம் - 3868 - திருமாலின் திருவருள் உணர்த்தப் பெற்றேன்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஒண்பதாம் பாசுரம்
இன்று என்னைப் பொருளாக்கித்* தன்னை என்னுள் வைத்தான்*
அன்று என்னைப் புறம்போகப்* புணர்த்தது என் செய்வான்?*
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ்* திருப்பேரான்*
ஒன்று எனக்கு அருள் செய்ய* உணர்த்தல் உற்றேனே|
032. திவ்ய ப்ரபந்தம் - 3869 - திருமாலின் அடியார்க்கடியார்க்குத் துன்பமே இல்லை
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - பத்தாம் பாசுரம்
உற்றேன் உகந்து பணிசெய்து* உன பாதம் பெற்றேன்*
ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*
கற்றார் மறைவாணர்கள்* வாழ் திருப்பேராற்கு*
அற்றார் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே| (2)
033. திவ்ய ப்ரபந்தம் - 3870 - இவற்றைப் படித்தோரின் அடியார்கள் விண்ணுலகை ஆள்வார்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - பதினொன்றாம் பாசுரம்
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல்*
நல்லார் பலர் வாழ்* குருகூர்ச் சடகோபன்*
சொல் ஆர் தமிழ்* ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்*
தொண்டர் ஆள்வது* சூழ் பொன் விசும்பே| (2)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்