About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 28 December 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 90

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 60

ப⁴க³வாந் ப⁴க³ஹா நந்தீ³
வநமாலீ ஹலாயுத⁴:|
ஆதி³த்யோ ஜ்யோதி ராதி³த்ய:
ஸஹிஷ்ணுர் க³தி ஸத்தம:||

  • 563. ப⁴க³வாந் - வழிபாட்டுக்கு உரியவர். வணக்கத்திற்கு உரியவர். தெய்வீகம் மற்றும் மங்களகரமான ஆறு குணங்கள் அல்லது ஷட் குணங்கள் நிறைந்தவர். ஞானம் (அறிவு), சக்தி (ஆற்றல்), பலா (வலிமை), ஐஸ்வர்யா (இறையாண்மை அல்லது செல்வம்), வீரியம் (வீரம்), மற்றும் தேஜஸ் (பிரகாசம்). எல்லா உயிர்களின் தோற்றத்தையும் முடிவையும் அறிந்தவர்.
  • 564. ப⁴க³ஹா - நற்குணவான். 
  • 565. நந்தீ³ - நந்த கோபன் குமரன். இயற்கையால் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறார். எப்பொழுதும் தன் பக்தர்களுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைபவர். தனது பக்தர்களுக்கு பேரின்பம் தருகிறார். 
  • 566. வநமாலீ - வநப் பூக்களால் செய்யப்பட்ட அழகிய வநமாலை  என்னும் திருவாபரணம் அணிந்து, எப்போதும் ஆனந்தமாக இருக்கிறார். 
  • 567. ஹலாயுத⁴ஹ - கலப்பையை ஆயுதமாக உடையவர்.
  • 568. ஆதி³த்யோ - முந்தைய பிறவியில் அதிதியாக இருந்த தேவகியின் புதல்வர். அவரது வாமன அவதாரத்தில் அதிதியின் (மற்றும் காஷ்யபரின்) புதல்வர். மோட்சத்தை வழங்குபவர்.
  • 569. ஜ்யோதிர் ஆதி³த்யஸ் - ஒளி வடிவினன். முழு பிரகாசத்தில் சூரியன். சூரியனின் கோளத்தில் வசிப்பவர். சூரியனைப் போல் ஒளிர்பவர்.
  • 570. ஸஹிஷ்ணுர் - பொறுத்துக் கொள்பவர். அவர் மகத்தான பொறுமையைக் கொண்டவர். மன்னிப்பவர். பரிபூரணமான பற்றின்மையுடன் நமக்காகப் பொறுமையாகத் துன்பப் படுபவர். தன் பக்தர்களின் காணிக்கைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்பவர். வெப்பம் மற்றும் குளிர் போன்ற உச்சக் கட்டங்களை தாங்கக் கூடியவர்.
  • 571. க³தி ஸத்தமஹ - தரும வழியைக் காட்டுபவர். தேடப்பட வேண்டிய புகலிடங்களில் சிறந்வர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.27 

ஜாதஸ்ய ஹி த்⁴ருவோ ம்ருத்யுர்
த்⁴ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|
தஸ்மாத³ பரிஹார் யேர்தே² 
ந த்வம் ஸோ²சிது மர்ஹஸி||

  • ஜாதஸ்ய - பிறந்தவன் 
  • ஹி - நிச்சயமாய் 
  • த்⁴ருவோ - உண்மை 
  • ம்ருத்யுர் - மரணம் 
  • த்⁴ருவம் -அதுவும் உண்மை 
  • ஜந்ம - பிறப்பு 
  • ம்ருதஸ்ய - இறந்தவனின் 
  • ச - மேலும் 
  • தஸ்மாத்³ - எனவே 
  • அபரி ஹார்யே - தவிர்க்க முடியாதது 
  • அர்தே² - பற்றிய பொருளில் 
  • ந - வேண்டாம் 
  • த்வம் - நீ 
  • ஸோ²சிதும் - கவலைப்பட 
  • அர்ஹஸி - தகாது

பிறந்தவன் நிச்சயமாய் இறப்பது உண்மை. மேலும் இறந்தவனின் பிறப்பு, அதுவும் உண்மை. எனவே, தவிர்க்க முடியாதது பற்றிய விஷயங்களுக்காக, நீ கவலை கொள்ள வேண்டாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.25

அதா² ஸௌ யுக³ ஸந்த்⁴யா யாம் 
த³ஸ்யு ப்ராயேஷு ராஜஸு|
ஜநிதா விஷ்ணு யஸ²ஸோ 
நாம்நா கல்கிர் ஜக³த்பதி:||

  • அத² - பிறகு இருபத்திரண்டாவதாக 
  • ஜக³த்பதிஹி - இந்த லோகபதியான 
  • அஸௌ - ஸ்ரீ பரமாத்மா 
  • யுக³ ஸந்த்⁴யா யாம் - கலியுக முடிவில் 
  • ராஜஸு - அரசர் யாவரும் 
  • த³ஸ்யு ப்ராயேஷு - கொள்ளைக்காரர்களாக ஆகிய அளவில் 
  • நாம்நா கல்கிர் - பெயரால் கல்கி என்றவராய் 
  • விஷ்ணு யஸ²ஸோ - விஷ்ணு யசஸ் என்ற பிராமணனுக்கு 
  • ஜநிதா - பிறக்கப் போகிறார்

கலியுக முடிவில் அரசர்கள் திருடர்கள் போல் கொள்ளையர்களாக ஆகும் போது, உலக நாயகரான பகவான் இருபத்தி இரண்டாவது அவதாரமாக 'விஷ்ணு யசஸ்' என்கிற அந்தணனுக்கு, 'கல்கி' என்ற திருப்பெயருடன் திரு அவதாரம் செய்யப் போகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.25

தம் வ்ரஜந்தம் ப்ரியோ ப்⁴ராதா 
லக்ஷ்மணோ நுஜ கா³மஹ|
ஸ்நேஹாத்³ விநய ஸம்பந்ந: 
ஸுமித்ரா நந்த³வர்த⁴ந:|| 

  • விநய ஸம்பந்நஹ - மேன் மக்களுக்கு ஏற்ற ஒழுக்கத்தில் முழு தேர்ச்சி அடைந்தவரான
  • ஸுமித்ரா நந்த³ - ஸுமித்திரைக்கு ஆனந்தத்தை
  • வர்த⁴நஹ - பெருக்குகிறவரான
  • ப்ரியோ - இஷ்டரான
  • ப்⁴ராதா - உடன் பிறந்தவரான
  • லக்ஷ்மணோ - லக்ஷ்மணர்
  • வ்ரஜந்தம் - புறப்பட்டு போகிற
  • தம் - அவரை
  • ஸ்நேஹாத்³ - ஸ்நேஹத்தால் 
  • அநு ஜகா³ம ஹ - பின் தொடர்ந்தார்

சுமித்ரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனும், பணிவுள்ளவனும், அன்புக்குரிய தம்பியும், தமையனின் அன்புக்குரியவனுமான லக்ஷ்மணன், தன் தமையன் ராமன் நாட்டை விட்டுச் செல்லும் போது, அன்பு மிக்கவனாக அவனைப் பின் தொடர்ந்து சென்றான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 71 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 71 - ஏழ் உலகுக்கும் நாயகனே!
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி* 
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்* 
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர* 
ற்றவர் தெற்றி வர பெற்ற எனக்கருளி* 
மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்!* 
மதில் சூழ் சோலை மலைக்கரசே! கண்ணபுரத்தமுதே!* 
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை* 
ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே| (2)

  • உன்னையும் - மகோ உதாரனான உன்னை
  • ஒக்கலையில் - இடுப்பிலே
  • கொண்டு - எடுத்துக் கொண்டு
  • தம் இல் மருவி - தங்கள் வீடுகளில் கொண்டு போய்
  • உன்னொடு தங்கள் - உன்னோடு தங்களுடைய
  • கருத்து - நினைவுக்குத் தக்கபடி (அறிந்தபடி) களித்து
  • ஆயின செய்து வரும் - பின் மறுடியும் கொண்டு வரும்
  • கன்னியரும் - இளம் பெண்களும்
  • மகிழ - இச் செங்கீரையைக் கண்டு ஸந்தோஷிக்கும் படியாகவும்
  • கண்டவர் கண் - மற்றும் பார்த்தவர்களுடைய கண்கள்
  • குளிர - குளிரும் படியாகவும்
  • கற்றவர் - கவி சொல்லக் கற்றவர்கள்
  • தெற்றிவர - பிள்ளைக் கவிகள் தொடுத்து வரும் படியாகவும்
  • பெற்ற - உன்னை மகனாகப் பெற்ற
  • எனக்கு அருளி - எனக்கு அன்பு கூர்ந்து
  • மன்னு - பிரளய காலத்திலும் அழியாத
  • குறுங்குடியாய்! - திருக்குறுங்குடியில் இருப்பவனே!
  • வெள்ளறையாய்! - திருவெள்ளறையில் இருப்பவனே!
  • மதிள் சூழ் - மதிள்களால் சூழப்பட்ட
  • சோலை மலைக்கு - திருமாலிருஞ்சோலை மலைக்கு
  • அரசே! - அதிபதி ஆனவனே!
  • கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்திலே நிற்கிற
  • அமுதே! - அம்ருதம் போன்றவனே!
  • என் அவலம் - என் துன்பத்தை
  • களைவாய்! - நீக்குபவனே!
  • ஆடுக செங்கீரை - செங்கீரை ஆடி அருள வேணும்
  • ஏழ் உலகும் - ஸப்த லோகங்களுக்கும்
  • உடையாய் - ஸ்வாமியானவனே!
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக 

அழியாதிருக்கும் திருக்குறுங்குடியில் எழுந்தருளியும், திருவெள்ளறையில் வர்த்தித்தும், மதிளால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலைக்கு அதிபதியாகவும், திருக்கண்ண புரத்தில் அமுதாக நின்றும் இருப்பவனே, என் துன்பத்தை போக்குகிறவனே, உன்னை இளம்பெண்கள் தங்கள் இடுப்பில் வைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று கொஞ்சுவதால், அவர்களுக்குப் பிடித்தாற் போலும், சாமான்யர்கள் கண்குளிரவும், கவிகளைப் பாட வைக்கும் படியும், எனக்கு கிருபை பண்ணி என் பிள்ளையாகிய நீ செங்கீரை ஆடவேண்டும். ஏழு உலகங்களுக்கும் நாயகனே, நீ ஆட வேண்டும்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 019 - திருநாகை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

019. திருநாகை (நாகப்பட்டினம்)
பத்தொண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1758 - 1767 - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

சேர்ந்து உனக்குக் குற்றேவல் செய்திலன் என் சிந்தையில் நீ*
ஆர்ந்ததற்கு ஓர் கைம்மாறு அறிகிலேன் பூந்துவரை*
மன்னா கை ஆழி வலவா வலம் புரியாய்*
தென் நாகாய் அருளிச் செய்*

  • பூ துவரை மன்னா - அழகிய துவாரகாபுரிக்கு அரசனே!
  • கை ஆழி வலவா வலம் கை ஆழியாய் - வலத்திருக்கையில் சுதர்சநம் என்னும் சக்கரத்தை உடையவனே!
  • வலம் புரியாய் - இடத்திருக்கையில் பாஞ்ச ஜந்யம் என்னும் வலம்புரிச் சங்கத்தை உடையவனே!
  • தென் நாகையாய் - அழகிய திருநாகை என்னும் தலத்தில் எழுந்தருளி இருப்பவனே!
  • சேர்ந்து உனக்கு குறு ஏவல் செய்திலன் - அடியேன் இது வரையில் உன்னைச் சரணமாக அடைந்து உனக்குச்
  • சிறிய கைங்கரியத்தையும் செய்தேன் இல்லை. அவ்வாறு இருக்கவும்
  • என் சிந்தையில் - அடியேனது மனத்தில்
  • நீ ஆர்ந்ததற்கு - காரணமின்றி எழுந்த பெருங்கருணையோடு நீ நன்றாக எழுந்தருளி இருப்பதற்கு
  • ஓர் கைம்மாறு அறிகிலேன் - ஒரு பிரதி உபகாரத்தையும் அறியேன்
  • அருளிச்செய் - ஏதேனும் இருப்பின் அதனை இன்னதென்று நீ அடியேனுக்குக் கூறி அருள்வாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 81

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணர் இந்திரப்பிரஸ்தம் வருதல்|

பாண்டவர்கள் தலைநகரான இந்திரப்பிரஸ்தம் செல்லக் கிருஷ்ணர் ஏற்பாடுகள் செய்தார், தாருகனைத் தமது இரதத்தைத் தயார் செய்யும்படிச் சொன்னார். ஒரு பெரிய கூட்டம் அவரோடு சென்றது. நீண்ட பிரயாணத்திற்க்குப் பிறகு, கிருஷ்ணர் இந்திரப்பிரஸ்தத்தின் எல்லையை அடைந்தார். கிருஷ்ணர் வந்துவிட்டார் என்ற செய்தி யுதிஷ்டிரரை எட்டியது.


உடனே அவர் தம் சகோதரர்களுடனும் ஆசாரியர்களுடனும், வேதப் பிராமணர்கள் உரக்க வேதம் ஓதினார்கள். கிருஷ்ணர் இரதத்திலிருந்து கீழே இறங்கினர். கண்களில் கண்ணீர் மல்க, யுதிஷ்டிரர் அவரைத் திரும்பத் திரும்ப அணைத்துக் கொண்டார். 

யுதிஷ்டிரரைக் கண்டு கிருஷ்ணரும் பெருமகிழ்ச்சியுற்றார். என்ன துன்பங்கள் வந்தாலும் தர்மத்தைக் கைவிடாத தம் அத்தை பிள்ளைகளிடம் அவருக்குத் தனி அன்பு இருந்தது. யுதிஷ்டிரரும் பீமனும் கிருஷ்ணருக்கு மூத்தவர்கள். ஆகவே, விதிப்படி, கிருஷ்ணர் இவர்கள் பாதங்களைத் தொட்டு வணங்கினார். தம் ஒத்த வயதினனான அர்ஜுனனை அவர் தழுவிக் கொண்டார். இளையவர்களான நகுலனும் சகாதேவனும் கிருஷ்ணனுடைய பாதங்களைத் தொட்டு வணங்கினர். கிருஷ்ணர் அவர்கைத் தூக்கி நிறுத்தி அன்பு மொழிகளைப் பேசினார்.

ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. தெருக்கள் அலங்கரிக்கப் பட்டு, வழியெல்லாம் பன்னீர் தெளிக்கப்பட்டிருந்தது. எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு கிருஷ்ணரைக் கோலாகலமாக வரவேற்றார்கள்; வணங்கினார்கள். கிருஷ்ணர் முதலில் குந்தியின் இருப்பிடத்திற்குச் சென்று அவளை நமஸ்கரித்தார். தாயன்புடன் குந்தி இருப்பிடத்திற்குச் சென்று அவரை அணைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் வழிய, அவரை ஆசிர்வதித்தாள். யாரை யார் ஆசிர்வதிப்பது? வயதானவர்கள் இளையவர்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்ற ஒரு நியதியை ஒட்டித்தான் குந்தி கிருஷ்ணரை ஆசிர்வதித்தாள். 

கிருஷ்ணர் பிறகு திரௌபதியைப் பார்த்தார். அவள் இவரை வணங்கியதோடு, இவருடன் வந்திருந்த இவருடைய பத்தினிகளையும், குந்தியின் உத்தரவின் பேரில் தக்க முறையில் பூஜித்தாள். பிறகு கிருஷ்ணரும் அவருடைய பரிவாரங்களும் அரண்மனையில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றார். அங்கே பல நாட்கள் கிருஷ்ணர் பாண்டவர்களுடன் இன்பமான நாட்களைக் கழித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விராட் புருஷன்

ஸ்கந்தம் 02

“ஹே பரீக்ஷித், மனத்தில் திடம் கொண்டு, அனைத்தையும் துறந்து வெளிக் கிளம்பி, ப்ரும்மச்சர்ய விரதத்தை மேற்கொள்ள வேண்டும். புண்ய நதிகளில் நீராடி, தனியிடம் சென்று ப்ராணாயாமத்தினால் மூச்சை அடக்கி, ப்ரணவ ஜபம் செய்ய வேண்டும்.


ஐம்புலன்களையும் அடக்கி, மனத்தை பகவானின் மேனி அழகில் செலுத்த வேண்டும். பகவானையே இடையறாது தியானிக்க வேண்டும். பகவானின் ஒவ்வொரு அங்கமாகத் தியானித்து வேறு விஷயங்களில் மனம் திரும்பாதவாறு பகவானிடம் மனத்தை ஒருமைப் படுத்த வேண்டும். மனம் ஓய்வடையும் இடமே பகவானின் இருப்பிடம். இவ்வாறு தியானம் செய்யும் போது ரஜோ குணத்தாலும், தமோ குணத்தாலும் ஏற்படும் மன மயக்கங்களை தைரியமாக யோக தாரணை அதாவது மீண்டும் மீண்டும் பகவானின் ஸ்வரூபத்தில் மனத்தை செலுத்தி ஜெயிக்க வேண்டும்.”

பரிக்ஷித் கேட்டான், “எவ்வாறு தியானம் செய்தால் மன மாசுகள் அழியும்?”

“புலன்களை அடக்கி, பகவானின் உருவத்தில் மனத்தை நிறுத்த வேண்டும். முக்காலங்களில் நிகழும் அனைத்துமே பகவானின் திருவுருவத்தில் அடங்கும்” என்று சொல்லி வைராஜன் என்னும் விராட் ஸ்வரூபத்தை வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.

ப்ரபஞ்சத்தைத் தோற்றுவித்த விராட் புருஷரான பகவானுக்கு பாதாள லோகமே உள்ளங் கால்கள். ரஸா தலம் பாதங்கள், மஹா தலம் கணுக் கால்கள், தலாதலம் முன்னங் கால்கள், சுதலம் முழங்கால்கள், அதலமும், விதலமும் இரண்டு தொடைகள், பூதலம் இடுப்பு, ஆகாயமே தொப்புள், நக்ஷத்ர லோகமே திருமார்பு, மஹர் லோகமே கழுத்து, ஜனோ லோகமே திருமுகம், தபோ லோகமே நெற்றி, இவரது ஆயிரக் கணக்கான தலைகளே ஸத்ய லோகம், இந்த்ராதி தேவர்களே கைகள், திசைகளே காதுகள், ஒலியே கேட்கும் திறன், அஸ்வினி தேவர்களே சுவாச த்வாரங்கள், மணமே முகரும் சக்தி, ஒளிரும் அக்னி வாய், அந்தரிக்ஷ உலகமே கண்கள், சூரியன் பார்க்கும் திறன், இரவு பகல் இரண்டும் கண் இமைகள், ப்ரும்ம லோகம் புருவங்கள், நீர் இரு கன்னங்கள், சுவை உணர்வே நாக்கு, வேதங்களே ப்ரும் மரந்திரம் (உச்சந் தலை), யம தர்ம ராஜனே தெற்றிப் பற்கள், மற்ற பற்றுக்களே பற்கள், மாயையே புன்னகை, கடைக்கண் பார்வையே ஸ்ருஷ்டி, நதிகளே நாடிகள், மரங்கள் ரோமங்கள், வாயு மூச்சுக் காற்று, நடையே கால கதி, ஸத்வ ரஜஸ் தமஸ் ஆகிய முக்குணங்களே லீலைகள், மேகங்களே கேசங்கள், ஸந்தியா காலமே ஆடை, மூல ப்ரக்ருதியே ஹ்ருதயம், சந்திரனே மனம், அனைத்துமாக விளங்கும் பகவானுக்கு மஹத் தத்வமே அறிவுத் திறன்.

இவ்வாறு ஏராளமான விவரங்களை விளக்கமாகச் சொல்லி, இவரை தியானித்து தாரணை செய்தல் வேண்டும். இவரே அனைத்தும். இவரைத் தவிர வேறொன்றும் இல்லை. எனவே, எதைக் கண்டாலும் அதை பகவானின் அங்கம் என்றே பார்ப்பது சுலபமான ஸ்தூல உருவ தியானம். இவ்வாறு ப்ரும்ம தேவர் பகவானை தியானம் செய்து பகவானை மகிழ்வித்து, படைக்கும் திறனான அறிவைப் பெற்று முன்பு இருந்தது போலவே, ஒவ்வொரு ப்ரளயத்திற்குப் பின்னும் உலகைப் படைக்கிறார்.” என்றார் ஸ்ரீ சுகர்.

பார்க்கும் பொருள்களில் எல்லாம் பகவானை நினைவு படுத்திக் கொள்வதற்கு வைராஜ புருஷனின் தியானம் மிகவும் உதவி செய்யும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Wednesday, 27 December 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 89

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 59

வேதா⁴: ஸ்வாங்கோ³ ஜித: க்ருஷ்ணோ
த்³ருட⁴: ஸங்கர் ஷணோ ஸ்²யுத:|
வருணோ வாருணோ வ்ருக்ஷ:
புஷ்க ராக்ஷோ மஹா மநா:||

  • 551. வேதா⁴ஸ் - மங்களகரமானவர். சுப காரியங்களைச் செய்பவர். உருவாக்கியவர். வழங்குபவர். 
  • 552. ஸ்வாங்க³ - ஆளுகின்ற அரசாங்கத்தைப் பெற்றவர். இறையாண்மையின் அடையாளங்களைக் கொண்டவர். பிரபஞ்சத்தின் கருவி காரணமாகவும் பொருள் காரணமாகவும் இருக்கிறார். அழகான, நன்கு விகிதாசாரமான உறுப்புகளைக் கொண்டிருக்கிறார்.
  • 553. அஜிதஹ் - வெற்றி கொள்ள முடியாதவர். ஸ்ரீவைகுண்டம் என்று அழைக்கப்படும் வெல்ல முடியாத தலத்தின் அதிபதி. 
  • 554. கிருஷ்ணோ - கண்ணன் என்னும் கரு நிறத்தோன். தவிர்க்க முடியாத வசீகரம் கொண்டவர்.
  • 555. த்³ருட⁴ஸ் - திடமானவர். எண்ணங்களிலும், சொல்லிலும், செயலிலும் உறுதியும் உறுதியும் உடையவர். வலிமையானவர்.
  • 556. ஸங்கர்ஷணோ - சித், அசித் ஆகியவற்றை ஒரே அடியாகத் தன்னிடம் ஈர்ப்பவர் வியூக வாசுதேவர். மற்றவர்களை தன் அருகில் இழுப்பவர்.
  • 557. அஸ்²யுதஹ - தனது நிலையிலிருந்து நழுவாதவர். பக்தர்களை ஒரு போதும் நழுவ விடாதவர். பிறப்பு, வளர்ச்சி, சிதைவு, நோய், இறப்பு போன்ற எந்த மாற்றமும் இல்லாதவர். 
  • 558. வருணோ - எல்லாவற்றையும் மூடி மறைந்திருப்பவர். உறைபவர்.
  • 559. வாருணோ - பக்தர்களிடம் எப்போதும் இருப்பவர். பக்தர்களின் துன்பங்களை நீக்குபவர்.
  • 560. வ்ருக்ஷஃ - மரம் போல் நிழல் தந்து காப்பவர். மரத்தைப் போல உறுதியாகவும் அசையாமலும் நிற்பவர்.
  • 561. புஷ்க ராக்ஷோ - வலிமையான கண்ணோக்கு உடையவர், கருணை பொழியும் கண்களை உடையவர். தாமரை போன்ற அழகிய கண்களை உடையவர். எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர். சூரியனையும் சந்திரனையும் கண்களாகக் கொண்டவர். இதயத் தாமரையில் தியானம் செய்யும் போது உணர்வின் ஒளியாக அவர் பிரகாசிப்பவர்.
  • 562. மஹா மநாஹ - பரந்த மனம் படைத்தவர். தாராள மனதுடன் இருப்பவர். மிகவும் திறமையான மனம் கொண்டவர். வரம்பற்ற திறன் கொண்ட மனம் (புத்தி) உடையவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.26 

அத² சைநம் நித்ய ஜாதம் 
நித்யம் வா மந்யஸே ம்ருதம்|
ததா²பி த்வம் மஹா பா³ஹோ 
நைநம் ஸோ²சிது மர்ஹஸி||

  • அத² - இருப்பினும் 
  • ச - மேலும் 
  • ஏநம் - இந்த ஆத்மா 
  • நித்ய ஜாதம் - எப்போதும் பிறந்து கொண்டே இருப்பவன் 
  • நித்யம் - என்றுமே 
  • வா-அவ்வாறே 
  • மந்யஸே - நீ இவ்வாறு நினைத்து 
  • ம்ருதம் - இறந்து கொண்டே இருப்பவன் 
  • ததா²பி - ஆனாலும் 
  • த்வம் - நீ 
  • மஹா பா³ஹோ - பலம் பொருந்திய புயங்களை உடையோனே 
  • ந - இல்லை 
  • ஏநம் - ஆத்மாவைப் பற்றி 
  • ஸோ²சிதும் - கவலைப்பட 
  • அர்ஹஸி - தகாது

அவ்வாறே இருப்பினும், இந்த ஆத்மா, எப்போதும் பிறந்து கொண்டே இருப்பவன், இறந்து கொண்டே இருப்பவன். பலம் பொருந்திய புயங்களை கொண்டவனே, என்றுமே ஆத்மாவைப் பற்றி நீ இவ்வாறு நினைத்து, கவலைப்பட தேவை இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.24

தத: கலௌ ஸம்ப்ர வ்ருத்தே 
ஸம் மோஹாய ஸுரத்³ விஷாம்|
பு³த்³தோ⁴ நாம் நா ஜந ஸுத: 
கீக டேஷு ப⁴விஷ்யதி||

  • ததஹ் - இருபத்தோராவது அவதாரத்தில் 
  • கலௌ - கலியுகம் 
  • ஸம்ப்ர வ்ருத்தே - ஆரம்பித்த போது 
  • ஸுரத்³ விஷாம் - அஸுரர்களை 
  • ஸம் மோஹாய - மயக்குவதற்காக 
  • கீக டேஷு - கயா ப்ரதேசத்தில் 
  • நாம் நா - தனது பெயரால் 
  • பு³த்³தோ⁴ - புத்தர் என்றவராய் 
  • அஜந ஸுதஹ - அஜந ஸுதராக 
  • ப⁴விஷ்யதி - உண்டாகப் போகிறார்

அதன் பிறகு இருபத்தோராவது அவதாரமாக, கலியுகத் தொடக்கத்தில் தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களை மயக்குவதற்காக, கீகடம் என்கிற மகத ராஜ்யத்தில் அஜனன் என்பவரின் திருமகனாக 'புத்தர்' என்ற திருப்பெயருடன் திரு அவதாரம் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

வநவாஸ:

ஸ்லோகம் - 1.1.24

ஸ ஜகா³ம வநம் வீர: 
ப்ரதிஜ்ஞா மநு பாலயந்|
பிதுர் வசந நிர்தே³ ஸா²த் 
கைகேய்யா: ப்ரிய காரணாத்||

  • ஸ வீரஹ - அந்த வீரன் ஸ்ரீராமன் 
  • பிதுர் - பிதாவினுடைய
  • வசந நிர்தே³ ஸா²த் - வார்த்தையாகிய ஆஞ்ஜையால்
  • கைகேய்யாஃ - கைகேயினுடைய
  • ப்ரிய காரணாத் - இஷ்ட நிமித்தமாக
  • ப்ரதிஜ்ஞாம் - ப்ரிதிக்ஞையை
  • அநு பாலயந் - பரிபாலிப்பவராய்
  • வநம் - வனத்திற்கு
  • ஜகா³ம - சென்றார்

அந்த வீரர் ராமன், தன் தந்தை கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றுவதற்காகவும், கைகேயியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும்,  காட்டுக்குச் சென்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 70 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 70 - நப்பின்னை நாதனே!
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாதொரு கால்* 
தூய கருங்குழல் நற் தோகை மயிலனைய* 
நப்பினை தன் திறமா நல் விடை ஏழவிய* 
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே!* 
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத்* 
தனியொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய* 
என் அப்ப! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|

  • துப்பு உடை - நெஞ்சில் கடினத் தன்மை உடையரான
  • ஆயர்கள் தம் - இடையர்களுடைய
  • சொல் - வார்த்தையை
  • வழுவாது - தப்பாமல்
  • ஒரு கால் - ஒரு காலத்திலே
  • தூய - அழகியதாய்
  • கரு - கருமை நிற
  • குழல் - கூந்தலை உடையவளான 
  • நல் தோகை - நல்ல தோகையை உடைய
  • மயில் அனைய - மயில் போன்ற சாயலை உடையவளான
  • நப்பின்னை தன் திறமா - நப்பின்னைப் பிராட்டிக்காக
  • நல் - கொடிய 
  • விடைஏழ் - ஏழு முரட்டுக் காளைகளை
  • அவிய - அழியும் படி செய்த
  • நல்ல திறல் உடைய - நன்றான மிடுக்கை (திறமை) உடையனாய்
  • நாதன் ஆனவனே - இடையர்களின்  ஸ்வாமியானவனே!
  • தப்பின - பிறந்தவுடன் இறந்து போன
  • பிள்ளைகளை - வைதிகரின் நான்கு பிள்ளைகளையும்
  • தன் - தன்னுடைய
  • மிகு சோதி - தேஜோ ரூபமான பரம பதத்திலே
  • புக - செல்வதற்காக
  • தனி - தனியே
  • ஒரு - ஒப்பற்ற
  • தேர் - தேரை
  • கடலி - நடத்தி
  • தாயொடு கூட்டிய - உயிருடன் தாயிடம் சேர்ப்பித்த
  • என் அப்ப - என் அப்பனே!
  • எனக்கு - எனக்காக
  • ஒருகால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

கடும் நெஞ்சை உடைய இடையர்களின் வார்த்தைக்கு இணங்க மென்மையான திருமேனி உடையவனும், பராகிரமசாலியானவனும், ஆயர்களின் தலைவனுமான, கண்ணன் ஒரு சமயம் ஏழு முரட்டுக் காளைகளை அடக்கி, கருத்த கூந்தல் உடையவளும், மயில் தோகையைப் போன்றவளுமான நப்பின்னை பிராட்டியை மணந்து கொண்டான். பின்னர், ஒரு பிராமணனின் நாலு இறந்த பிள்ளைகளையும், தனியே ஒரு தேரில் பரமபதம் போய், அங்கிருந்து அவர்களை மீட்டு அவர்கள் தாயுடன் சேர்த்தான். ஆயர்களின் காளையே , பசுக்களின் ரக்ஷகனே, ஒரு செங்கீரை ஆடிவிடு என்கிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 019 - திருநாகை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

019. திருநாகை (நாகப்பட்டினம்)
பத்தொண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ ஸௌந்தர்ய ராஜப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ ஸௌந்தர்யவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஸௌந்தர்ய ராஜன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: ஸௌந்தர்ய ராஜன்
  • பெருமாள் உற்சவர்: நீலமேகம்
  • தாயார் மூலவர்: ஸௌந்தர்ய வல்லி
  • தாயார் உற்சவர்: கஜலட்சுமி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: ஸார
  • விமானம்: ஸௌந்தர்ய
  • ஸ்தல விருக்ஷம்: மாமரம்
  • ப்ரத்யக்ஷம்: நாகராஜன், கலியன், ப்ரம்ஹாதிகள்
  • ஆகமம்: பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சார புஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் ஒண்பது பாசுரங்களை பாடி விட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடும் செயல் புரிந்து வந்தார்கள். ஒரு நாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள்.  இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.

உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது ஸௌந்தர்யமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் "ஸௌந்தர்ய ராஜப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். 

நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், திருக்குருகைப் பெருமான் கவிராயர், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரின் பாடல்கள் இப்பெருமாளின் பேரழகைப் பாடுகின்றன. நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு "சார புஷ்கரணி' என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

லீலை கண்ணன் கதைகள் - 80

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

நாரதரின் வருகை|

வந்தவர் பேசிக் கொண்டிருக்கும் போதே நாரதர் அங்கே வந்து சேர்ந்தார். கையில் தம்புராவுடன் அவர் நாராயணனைப் பற்றி பாடிக்கொண்டே வந்தார். கிருஷ்ணர் அவரைத் தகுந்த மரியாதையுடன் வரவேற்றார். 


பிறகு அவரைப் பார்த்து, 'மூன்று உலகங்களும் நலமாக இருக்கின்றன என்று நம்புகிறேன். மூன்று உலகங்களிலும் சஞ்சரிக்கும் தங்களால் எங்களுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த மூன்று உலகங்களைப் பற்றிய செய்திகளைத் தங்களிடமிருந்து எங்களால் தெரிந்துக் கொள்ள முடிகிறது. உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இந்த மூன்று உலகங்களிலும் கிடையாது" என்று சொன்னார். 

நாரதர் சொன்னார், "கிருஷ்ணா! நீங்கள் சாதாரண மனிதனைப் போலத் தோற்றமளித்தாலும், நீங்கள் யார் என்பதை நான் அறிவேன். உலகில் நடப்பது ஒன்றும் தங்களுக்குத் தெரியாதது போலப் பேசுகிறேர்களே! அது எனக்குச் சிரிப்பைத் தான் உண்டாக்கிறது. இந்த உலகில் மட்டுமல்ல, மூன்று உலகங்களிலும் என்ன நடக்கிறது என்பது தங்களுக்குத் தெரியும். இருந்தும் தாங்கள் கேட்டதனால் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல விரும்புகிறேன். 

"குந்தியின் மகன் யுதிஷ்டிரர் ராஜசூயயாகம் செய்ய விரும்புகிறார். யாகத்திற்குப் பிறகு ஒரு சிறந்த புருஷரை ஆராதனை செய்ய வேண்டும். அதற்குத் தங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதற்குத் தாங்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும்" என்று வேண்டினார். நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணர் தாம் ஒரு தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். 

இரண்டு காரியங்கள் அவரை முன்னோக்கி இருந்தன. சுற்றிலும் பார்த்தபோது ஜராசந்தனோடு சண்டையிட்டு, அந்த அரசர்களை விடுதலை செய்ய, யாதவர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள் என்று பட்டது. ஆனால், யுதிஷ்டிரர் தமது ராஜசூய யாகத்திற்காக விடுத்த அழைப்பை ஏற்று, அங்கே செல்ல வேண்டும் என்று கிருஷ்ணர் நினைத்தார். 

உடனே அவர் தம் விசாலமான கண்களால் தம் நண்பர் உத்தவரைப் பார்த்தார். "அன்புள்ள நண்பரே! தாங்கள் தாம் புத்தியில் சிறந்தவர்; எது சரி என்று வழி சொல்லக்கூடியவர். ஆகவே தாங்கள் என்ன செய்யச் சொல்லுகிறீர்களோ, அதன்படி நடப்பேன்" என்று சொன்னார். 

கிருஷ்ணரால் ஒரு கஷ்டமான காரியம் கொடுக்கப்பட்ட உத்தவர் அடக்கத்துடன் எழுந்து நின்று, "கிருஷ்ணா! எனக்கு இந்த இரண்டு காரியங்களும் முக்கியம் வாய்ந்தவை, இரண்டும் உடனே கவனிக்கப்பட வேண்டியவை என்று தோன்றுகிறது. தங்களுடைய அத்தை மகனான யுதிஷ்டிரர் தமது ராஜசூய யாகத்தில் தாங்கள் இருக்கவேண்டும்மென்று விரும்புகிறார். ஆனால் சிறைப்பட்ட அரசர்களை நினைத்தாலோ, ஒவ்வொரு நாளும் அவர்களுக்குச் சித்திரவதையாக இருப்பதுடன் தாங்கள் தாம் அவைகளைக் காப்பாற்ற முடியும். உலகிலுள்ள எல்லா அரசர்களுக்கும் சவால் விடுத்து, அவர்களை வென்ற அரசன்தான் ராஜசூய யாகம் நடத்த முடியும். அதனால் யுதிஷ்டிரர் ஜராசந்தனுக்கும் சவால் விடுத்து, அவனையும் தோற்கடிக்க வேண்டும். 

அதனால் நீங்கள் யுதிஷ்டிரரிடம் சென்று, ஜராசந்தனுக்குச் சவால் விடுக்கும் படி அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள். இதனால் இரண்டு காரியங்களும் ஒரே சமயத்தில் செய்து முடிக்க முடியும். ஜராசந்தன் பத்தாயிரம் யானை பலம் உள்ளவன் என்று கேள்வியுற்றிருக்கிறேன். அதனால் அவனைக் கொள்வது எளிதல்ல. அதனால் யாராவது அவனோடு மல்யுத்தம் செய்து தான் அவனைக் கொல்ல வேண்டும். இதைச் செய்யக் கூடியவன், யுதிஷ்டிரரின் தம்பியான பீமன் ஒருவன்தான். தன்னோடு மல்யுத்தம் செய்யும் படி பீமன் ஜராசந்தனுக்குச் சவால் விடுத்தால், ஜராசந்தன் க்ஷத்ரியனானதால் மறுக்க மாட்டான். பீமன் நிச்சயமாக அவனைக் கொன்று விடுவான்" என்று சொன்னார். 

உத்தவர் சொன்ன சரியான ஆலோசனையை நாரதர் உட்பட எல்லோரும் ஆமோதித்தார்கள். உடனே கிருஷ்ணர் கிரி விரஜத்திலிருந்து வந்த தூதரைப் பார்த்து, "அவர்கள் எல்லோரும் சீக்கிரமே விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைப்பட்ட அரசர்களிடம் சொல்லுங்கள்" என்று சொல்லியனுப்பினார்.

அவரும் கிரிவிரஜம் திரும்பி இந்த நல்ல செய்தியை அரசர்களுக்குச் சொன்னார். நாரதரும், தம் வந்த காரியம் முடிந்தது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே, நாராயணனைத் துதித்துக் கொண்டே திரும்பினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்