||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.25
அதா² ஸௌ யுக³ ஸந்த்⁴யா யாம்
த³ஸ்யு ப்ராயேஷு ராஜஸு|
ஜநிதா விஷ்ணு யஸ²ஸோ
நாம்நா கல்கிர் ஜக³த்பதி:||
- அத² - பிறகு இருபத்திரண்டாவதாக
- ஜக³த்பதிஹி - இந்த லோகபதியான
- அஸௌ - ஸ்ரீ பரமாத்மா
- யுக³ ஸந்த்⁴யா யாம் - கலியுக முடிவில்
- ராஜஸு - அரசர் யாவரும்
- த³ஸ்யு ப்ராயேஷு - கொள்ளைக்காரர்களாக ஆகிய அளவில்
- நாம்நா கல்கிர் - பெயரால் கல்கி என்றவராய்
- விஷ்ணு யஸ²ஸோ - விஷ்ணு யசஸ் என்ற பிராமணனுக்கு
- ஜநிதா - பிறக்கப் போகிறார்
கலியுக முடிவில் அரசர்கள் திருடர்கள் போல் கொள்ளையர்களாக ஆகும் போது, உலக நாயகரான பகவான் இருபத்தி இரண்டாவது அவதாரமாக 'விஷ்ணு யசஸ்' என்கிற அந்தணனுக்கு, 'கல்கி' என்ற திருப்பெயருடன் திரு அவதாரம் செய்யப் போகிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment