||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
019. திருநாகை (நாகப்பட்டினம்)
பத்தொண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1758 - 1767 - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
சேர்ந்து உனக்குக் குற்றேவல் செய்திலன் என் சிந்தையில் நீ*
ஆர்ந்ததற்கு ஓர் கைம்மாறு அறிகிலேன் பூந்துவரை*
மன்னா கை ஆழி வலவா வலம் புரியாய்*
தென் நாகாய் அருளிச் செய்*
- பூ துவரை மன்னா - அழகிய துவாரகாபுரிக்கு அரசனே!
- கை ஆழி வலவா வலம் கை ஆழியாய் - வலத்திருக்கையில் சுதர்சநம் என்னும் சக்கரத்தை உடையவனே!
- வலம் புரியாய் - இடத்திருக்கையில் பாஞ்ச ஜந்யம் என்னும் வலம்புரிச் சங்கத்தை உடையவனே!
- தென் நாகையாய் - அழகிய திருநாகை என்னும் தலத்தில் எழுந்தருளி இருப்பவனே!
- சேர்ந்து உனக்கு குறு ஏவல் செய்திலன் - அடியேன் இது வரையில் உன்னைச் சரணமாக அடைந்து உனக்குச்
- சிறிய கைங்கரியத்தையும் செய்தேன் இல்லை. அவ்வாறு இருக்கவும்
- என் சிந்தையில் - அடியேனது மனத்தில்
- நீ ஆர்ந்ததற்கு - காரணமின்றி எழுந்த பெருங்கருணையோடு நீ நன்றாக எழுந்தருளி இருப்பதற்கு
- ஓர் கைம்மாறு அறிகிலேன் - ஒரு பிரதி உபகாரத்தையும் அறியேன்
- அருளிச்செய் - ஏதேனும் இருப்பின் அதனை இன்னதென்று நீ அடியேனுக்குக் கூறி அருள்வாயாக
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment