About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 28 December 2023

108 திவ்ய தேசங்கள் - 019 - திருநாகை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

019. திருநாகை (நாகப்பட்டினம்)
பத்தொண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1758 - 1767 - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

சேர்ந்து உனக்குக் குற்றேவல் செய்திலன் என் சிந்தையில் நீ*
ஆர்ந்ததற்கு ஓர் கைம்மாறு அறிகிலேன் பூந்துவரை*
மன்னா கை ஆழி வலவா வலம் புரியாய்*
தென் நாகாய் அருளிச் செய்*

  • பூ துவரை மன்னா - அழகிய துவாரகாபுரிக்கு அரசனே!
  • கை ஆழி வலவா வலம் கை ஆழியாய் - வலத்திருக்கையில் சுதர்சநம் என்னும் சக்கரத்தை உடையவனே!
  • வலம் புரியாய் - இடத்திருக்கையில் பாஞ்ச ஜந்யம் என்னும் வலம்புரிச் சங்கத்தை உடையவனே!
  • தென் நாகையாய் - அழகிய திருநாகை என்னும் தலத்தில் எழுந்தருளி இருப்பவனே!
  • சேர்ந்து உனக்கு குறு ஏவல் செய்திலன் - அடியேன் இது வரையில் உன்னைச் சரணமாக அடைந்து உனக்குச்
  • சிறிய கைங்கரியத்தையும் செய்தேன் இல்லை. அவ்வாறு இருக்கவும்
  • என் சிந்தையில் - அடியேனது மனத்தில்
  • நீ ஆர்ந்ததற்கு - காரணமின்றி எழுந்த பெருங்கருணையோடு நீ நன்றாக எழுந்தருளி இருப்பதற்கு
  • ஓர் கைம்மாறு அறிகிலேன் - ஒரு பிரதி உபகாரத்தையும் அறியேன்
  • அருளிச்செய் - ஏதேனும் இருப்பின் அதனை இன்னதென்று நீ அடியேனுக்குக் கூறி அருள்வாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment