About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 10 April 2024

108 திவ்ய தேசங்கள் - 034 - திருவாலி – திருநகரி 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

034. திருவாலி – திருநகரி (திருநாங்கூர்)
முப்பத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 42 - 2

022. திவ்ய ப்ரபந்தம் - 1207 - இத்தமிழ்மாலை படித்தோரைத் தீவினைகள் சேரா
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மை இலங்கு கருங் குவளை* மருங்கு அலரும் வயல் ஆலி*
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை* நெடுமாலை*
கை இலங்கு வேல் கலியன்* கண்டு உரைத்த தமிழ் மாலை*
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு* அரு வினைகள் அடையாவே|

023. திவ்ய ப்ரபந்தம் - 1208 - கள்வனும் என் மகளும் ஆலிநகர் புகுவரோ?
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கள்வன் கொல்? யான் அறியேன்* கரியான் ஒரு காளை வந்து*
வள்ளி மருங்குல்* என் தன் மட மானினைப் போத என்று*
வெள்ளி வளைக் கை* பற்றப் பெற்ற தாயரை விட்டு அகன்று*
அள்ளல் அம் பூங் கழனி* அணி ஆலி புகுவர்கொலோ?

024. திவ்ய ப்ரபந்தம் - 1209 - என் மகள் ஆயனுடன் பேசிக் கொண்டே ஆலி புகுவாளோ?
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பண்டு இவன் ஆயன் நங்காய்* படிறன் புகுந்து* 
என் மகள் தன் தொண்டை அம் செங் கனி வாய்* நுகர்ந்தானை உகந்து* 
அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக்* கிளிபோல் மிழற்றி நடந்து*
வண்டு அமர் கானல் மல்கும்* வயல் ஆலி புகுவர்கொலோ?

025. திவ்ய ப்ரபந்தம் - 1210 - சூர்ப்பனகை மூக்கை அறுத்தவனுடன் சென்றாளே! ஐயகோ!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
அஞ்சுவன் வெம் சொல் நங்காய்* அரக்கர் குலப் பாவை தன்னை*
வெம் சின மூக்கு அரிந்த* விறலோன் திறம் கேட்கில் மெய்யே*
பஞ்சிய மெல் அடி* எம் பணைத் தோளி பரக்கழிந்து*
வஞ்சி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ?

026. திவ்ய ப்ரபந்தம் - 1211 - மாதவனைத் துணைக் கொண்டு நடந்தாளே!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம்
ஏது அவன் தொல் பிறப்பு?* இளையவன் வளை ஊதி* 
மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்* சொல்வீர்கள் சொலீர் அறியேன்*
மாதவன் தன் துணையா நடந்தாள்* தடம் சூழ் புறவில்*
போது வண்டு ஆடு செம்மல்* புனல் ஆலி புகுவர்கொலோ?

027. திவ்ய ப்ரபந்தம் - 1212 - மாயனுடன் அன்னமென நடந்து செல்வாளோ!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தாய் எனை என்று இரங்காள்* தடந் தோளி தனக்கு அமைந்த*
மாயனை மாதவனை* மதித்து என்னை அகன்ற இவள்*
வேய் அன தோள் விசிறிப்* பெடை அன்னம் என நடந்து*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர்கொலோ?

028. திவ்ய ப்ரபந்தம் - 1213 - என்னிடம் இரக்கமின்றிச் சென்று விட்டாளே!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
என் துணை என்று எடுத்தேற்கு* இறையேனும் இரங்கிற்றிலள்*
தன் துணை ஆய என் தன்* தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்* வரம் செற்று அரங்கத்து உறையும்*
இன் துணைவனொடும் போய்* எழில் ஆலி புகுவர்கொலோ?

029. திவ்ய ப்ரபந்தம் - 1214 - நப்பின்னை மணாளனை விரும்பினாளே!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
அன்னையும் அத்தனும் என்று* அடியோமுக்கு இரங்கிற்றிலள்*
பின்னை தன் காதலன் தன்* பெருந் தோள் நலம் பேணினளால்*
மின்னையும் வஞ்சியையும்* வென்று இலங்கும் இடையாள் நடந்து*
புன்னையும் அன்னமும் சூழ்* புனல் ஆலி புகுவர்கொலோ?

030. திவ்ய ப்ரபந்தம் - 1215 - யாவரும் தொழுமாறு ஆலி புகுவரோ?
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முற்றிலும் பைங் கிளியும்* பந்தும் ஊசலும் பேசுகின்ற*
சிற்றில் மென் பூவையும்* விட்டு அகன்ற செழுங் கோதை தன்னைப்*
பெற்றிலேன் முற்று இழையை* பிறப்பிலி பின்னே நடந்து*
மற்று எல்லாம் கைதொழப் போய்* வயல் ஆலி புகுவர்கொலோ?

031. திவ்ய ப்ரபந்தம் - 1216 - நெடுமாலும் என் மகளும் ஆலி புகுவரோ?
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
காவி அம் கண்ணி எண்ணில்* கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்*
பாவியேன் பெற்றமையால்* பணைத் தோளி பரக்கழிந்து*
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்* நெடுமாலொடும் போய்*
வாவி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ?

032. திவ்ய ப்ரபந்தம் - 1217 - இத்தமிழ்மாலை படித்தோர் தேவருலகு அடைவர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தாய் மனம் நின்று இரங்கத்* தனியே நெடுமால் துணையா*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர் என்று*
காய் சின வேல் கலியன்* ஒலிசெய் தமிழ் மாலை பத்தும்*
மேவிய நெஞ்சு உடையார்* தஞ்சம் ஆவது விண் உலகே|

033. திவ்ய ப்ரபந்தம் - 1329 - இந்தளூராய்! இரக்கம் காட்டு
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே* மருவினிய மைந்தா*
அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே*
நந்தா விளக்கின் சுடரே* நறையூர் நின்ற நம்பீ* 
என் எந்தாய் இந்தளூராய்* அடியேற்கு இறையும் இரங்காயே|

034. திவ்ய ப்ரபந்தம் - 1519 - கடல் கடைந்தவனை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
முந்நீரை முன் நாள்* கடைந்தானை* 
மூழ்த்த நாள் அந் நீரை மீன் ஆய்* அமைத்த பெருமானை*
தென் ஆலி மேய திருமாலை எம்மானை*
நல் நீர் சூழ்* நறையூரில் கண்டேனே|

035. திவ்ய ப்ரபந்தம் - 1733 - மனமே! கண்ணபுரத்தானை மறவாதே
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
எஞ்சா வெம் நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*
அஞ்சேல் என்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*
நெஞ்சே நீ நினையாது* இறைப்பொழுதும் இருத்தி கண்டாய்*
மஞ்சு ஆர் மாளிகை சூழ்* வயல் ஆலி மைந்தனையே|

036. திவ்ய ப்ரபந்தம் - 1735 - பிறவா வரம் பெற்று விட்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கற்றார் பற்று அறுக்கும்* பிறவிப் பெருங் கடலே*
பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்த பின்னை*
வற்றா நீர் வயல் சூழ்* வயல் ஆலி அம்மானைப் பெற்றேன்* 
பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே|

037. திவ்ய ப்ரபந்தம் - 1850 - திருவாலியும் திருநாங்கூரும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வேலை ஆல் இலைப்* பள்ளி விரும்பிய*
பாலை ஆர் அமுதத்தினைப்* பைந் துழாய்* 
மாலை ஆலியில்* கண்டு மகிழ்ந்து போய்*
ஞாலம் உன்னியைக் காண்டும்* நாங்கூரிலே|

038. திவ்ய ப்ரபந்தம் - 2014 - பகவான் பெருமை பேசாதார் பேச்சு பேச்சல்ல
பெரிய திருமொழி - பதினொன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
தூயானைத்* தூய மறையானை* தென் ஆலி மேயானை* 
மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட வாயானை*
மாலை வணங்கி* அவன் பெருமை பேசாதார்* 
பேச்சு என்றும்* பேச்சு அல்ல கேட்டாமே|

039. திவ்ய ப்ரபந்தம் - 2027 - இடையன் (அரைகுறையாக) வெட்டிய மரம் போல்
பெரிய திருமொழி - பதினொன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
படை நின்ற* பைந்தாமரையோடு* 
அணி நீலம் மடை நின்று அலரும்* வயல் ஆலி மணாளா* 
இடையன் எறிந்த மரமே* ஒத்து இராமே*
அடைய அருளாய்* எனக்கு உன் தன் அருளே|

040. திவ்ய ப்ரபந்தம் - 2063 - அரங்கனை எண்ணி அயர்கின்றாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (12)
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்* 
நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்* 
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும்* 
வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்* 
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்* 
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்* 
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்* 
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே|

041. திவ்ய ப்ரபந்தம் - 2706 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2)
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே* 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்* 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை (2)

042. திவ்ய ப்ரபந்தம் - 2773 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை* 
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை* மன்னும் அரங்கத்து எம் மா மணியை*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment