About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 10 April 2024

108 திவ்ய தேசங்கள் - 034 - திருவாலி – திருநகரி 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

034. திருவாலி – திருநகரி (திருநாங்கூர்)
முப்பத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 42 - 1

001. திவ்ய ப்ரபந்தம் - 725 - அயோத்தி மன்னனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
ஆலின் இலைப் பாலகனாய்* அன்று உலகம் உண்டவனே*
வாலியைக் கொன்று அரசு* இளைய வானரத்துக்கு அளித்தவனே*
காலின் மணி கரை அலைக்கும்* கணபுரத்து என் கருமணியே*
ஆலி நகர்க்கு அதிபதியே* அயோத்திமனே தாலேலோ|

002. திவ்ய ப்ரபந்தம் - 1078 - நால்வகைத் திருக்கோலங் கொண்டவன் இடம்
பெரிய திருமொழி - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது* 
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* 
தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* 
மா மலை ஆவது நீர்மலையே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1188 - சிந்தனைக்கு இனியான் திருவாலி அம்மான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்* புகுந்ததன் பின் வணங்கும்* 
என் சிந்தனைக்கு இனியாய்* திருவே என் ஆர் உயிரே*
அம் தளிர் அணி ஆர்* அசோகின் இளந்தளிர்கள் கலந்து* 
அவை எங்கும் செந் தழல் புரையும்* திருவாலி அம்மானே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1189 - அடியேன் மனத்திருந்த அணியாலி அம்மான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
நீலத் தட வரை மா மணி நிகழக்* கிடந்தது போல் அரவு அணை*
வேலைத் தலைக் கிடந்தாய்* அடியேன் மனத்து இருந்தாய்*
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட* மழை முகில் போன்று எழுந்து* 
எங்கும் ஆலைப் புகை கமழும்* அணி ஆலி அம்மானே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1190 - மனத்தில் நிலை பெற்றவன் ஆலி அம்மான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி* இராமை என் மனத்தே புகுந்தது*
இம்மைக்கு என்று இருந்தேன்* எறி நீர் வளஞ் செறுவில்*
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார்* முகத்து எழு வாளை போய்* கரும்பு
அந் நல் நாடு அணையும்* அணி ஆலி அம்மானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1191 - நின் திருவடிகளை மறக்காமல் இருக்க அருள் செய்தாயே!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
மின்னின் மன்னும் நுடங்கு இடை* மடவார் தம் சிந்தை மறந்து வந்து* 
நின் மன்னு சேவடிக்கே* மறவாமை வைத்தாயால்*
புன்னை மன்னு செருந்தி* வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து* 
எங்கும் அன்னம் மன்னும் வயல்* அணி ஆலி அம்மானே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1192 - அம்மானே! என்னை விட்டு நீங்க நினையாதே
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
நீடு பல் மலர் மாலை இட்டு* நின் இணை அடி தொழுது ஏத்தும்* 
என் மனம் வாட நீ நினையேல்* மரம் எய்த மா முனிவா*
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை* பரந்து பல் பணையால் மலிந்து* 
எங்கும் ஆடல் ஓசை அறா* அணி ஆலி அம்மானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1193 - அம்மானே! நீ எங்கும் செல்ல விட மாட்டேன்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கந்த மா மலர் எட்டும் இட்டு* நின் காமர் சேவடி கைதொழுது எழும்*
புந்தியேன் மனத்தே* புகுந்தாயைப் போகலொட்டேன்*
சந்தி வேள்வி சடங்கு நான்மறை* ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்*
அந்தணாளர் அறா* அணி ஆலி அம்மானே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1194 - புண்ணியனே! உன்னை நான் விட மாட்டேன்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
உலவு திரைக் கடல் பள்ளிகொண்டு வந்து* உன் அடியேன் மனம் புகுந்த* 
அப்புலவ புண்ணியனே* புகுந்தாயைப் போகலொட்டேன்*
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்* தண் தாமரை மலரின் மிசை* 
மலி அலவன் கண்படுக்கும்* அணி ஆலி அம்மானே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1195 - திருவாலி அம்மானே! என் மனத்தில் புகுந்து விட்டாய்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
சங்கு தங்கு தடங் கடல்* கடல் மல்லையுள் கிடந்தாய்* 
அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்* இனிப் போயினால் அறையோ!*
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி* இன் இள வண்டு போய்* 
இளந் தெங்கின் தாது அளையும்* திருவாலி அம்மானே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1196 - ஆயிரம் நாமமும் கூறினேன்; ஒரு சொல் உரை
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி* நின் அடைந்தேற்கு* 
ஒரு பொருள் வேதியா அரையா* உரையாய் ஒரு மாற்றம்* 
எந்தாய் நீதி ஆகிய வேத மா முனி யாளர்* தோற்றம் உரைத்து* 
மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்* அணி ஆலி அம்மானே|

012. திவ்ய ப்ரபந்தம் - 1197 - இவற்றைப் பாடுவோர்க்கு இடம் வானுலகு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்* தென் ஆலி இருந்த மாயனை*
கல்லின் மன்னு திண் தோள்* கலியன் ஒலி செய்த*
நல்ல இன் இசை மாலை* நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம்* 
உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு* இடம் ஆகும் வான் உலகே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1198 - வண்டே! திருவாலிப் பெருமானிடம் எனது நிலையை உரை
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தூ விரிய மலர் உழக்கித்* துணையோடும் பிரியாதே*
பூ விரிய மது நுகரும்* பொறி வரிய சிறு வண்டே*
தீ விரிய மறை வளர்க்கும்* புகழ் ஆளர் திருவாலி*
ஏ வரி வெம் சிலையானுக்கு* என் நிலைமை உரையாயே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1199 - வண்டே! மணவாளனிடம் என் காதலைச் சொல்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பிணி அவிழு நறு நீல* மலர் கிழியப் பெடையோடும்*
அணி மலர்மேல் மது நுகரும்* அறு கால சிறு வண்டே*
மணி கழுநீர் மருங்கு அலரும்* வயல் ஆலி மணவாளன் பணி அறியேன்* 
நீ சென்று* என் பயலை நோய் உரையாயே|

015. திவ்ய ப்ரபந்தம் - 1200 - குருகே! மணவாளனிடம் குறிப்பறிந்து கூறு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
நீர் வானம் மண் எரி கால் ஆய்* நின்ற நெடுமால்* 
தன் தார் ஆய நறுந் துளவம்* பெறும் தகையேற்கு அருளானே*
சீர் ஆரும் வளர் பொழில் சூழ்* திருவாலி வயல் வாழும்*
கூர் வாய சிறு குருகே* குறிப்பு அறிந்து கூறாயே|

016. திவ்ய ப்ரபந்தம் - 1201 - வண்டே! எனது நோயை மணவாளனிடம் சொல்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்
தானாக நினையானேல்* தன் நினைந்து நைவேற்கு* 
ஓர் மீன் ஆய கொடி நெடு வேள்* வலி செய்ய மெலிவேனோ?*
தேன் வாய வரி வண்டே* திருவாலி நகர் ஆளும்*
ஆன் ஆயற்கு என் உறு நோய்* அறியச் சென்று உரையாயே|

017. திவ்ய ப்ரபந்தம் - 1202 - குடந்தைப் பெருமானே! எனக்குத் துணைவனாகுக
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வாள் ஆய கண் பனிப்ப* மென் முலைகள் பொன் அரும்ப*
நாள் நாளும்* நின் நினைந்து நைவேற்கு* 
ஓ மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா* 
வரை எடுத்த தோளாளா* என் தனக்கு ஓர்* துணையாளன் ஆகாயே|

018. திவ்ய ப்ரபந்தம் - 1203 - கருட வாகனன் என் வளையும் கவர்வானோ!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
தார் ஆய தன் துளவ* வண்டு உழுதவரை மார்பன்*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த* புள் பாகன் என் அம்மான்*
தேர் ஆரும் நெடு வீதித்* திருவாலி நகர் ஆளும்*
கார் ஆயன் என்னுடைய* கன வளையும் கவர்வானோ?

019. திவ்ய ப்ரபந்தம் - 1204 - மணவாளா! என் கண்ணில் நீ உள்ளாயே!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கொண்டு அரவத் திரை உலவு* குரை கடல்மேல் குலவரை போல்*
பண்டு அரவின் அணைக் கிடந்து* பார் அளந்த பண்பாளா*
வண்டு அமரும் வளர் பொழில் சூழ்* வயல் ஆலி மைந்தா* 
என் கண் துயில் நீ கொண்டாய்க்கு* என் கன வளையும் கடவேனோ?

020. திவ்ய ப்ரபந்தம் - 1205 - மணவாளா! உனது நினைவால் தூங்கவே இல்லை!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்* தண் குடந்தைக் குடம் ஆடி*
துயிலாத கண் இணையேன்* நின் நினைந்து துயர்வேனோ?*
முயல் ஆலும் இள மதிக்கே* வளை இழந்தேற்கு* 
இது நடுவே வயல் ஆலி மணவாளா* கொள்வாயோ மணி நிறமே?

021. திவ்ய ப்ரபந்தம் - 1206 - மணவாளா! ஒரு நாளாவது என்னைத் தழுவு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
நிலை ஆளா நின் வணங்க* வேண்டாயே ஆகிலும்* 
என் முலை ஆள ஒருநாள்* உன் அகலத்தால் ஆளாயே*
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா* 
திருமெய்ய மலையாளா* நீ ஆள வளை ஆள மாட்டோமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment