About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 10 April 2024

திவ்ய ப்ரபந்தம் - 113 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 113 - பத்திராகாரன் கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

சத்திரம் ஏந்தித்* தனி ஒரு மாணியாய்*
உத்தர வேதியில்* நின்ற ஒருவனைக்* 
கத்திரியர் காணக்* காணி முற்றும் கொண்ட* 
பத்திரா காரன் புறம் புல்குவான்* 
பாரளந்தான் என் புறம் புல்குவான்|

  • உத்தர வேதியில் - ஔதார்யத்தில் அத்விதீயனான மகாபலியின் வேள்வியில்
  • நின்ற ஒருவனை -  சென்றவவரை
  • சத்திரம் - குடையை
  • ஏந்தி - கையில் பிடித்துக் கொண்டு
  • தனி - தனி ஒருவனாக ஒப்பற்ற
  • ஒரு மாணி ஆய் - ஒரு ப்ரஹ்மசாரி வாமனனாய் போய் 
  • கத்திரியர் - அவனுக்குக் கீழ்ப்பட்ட க்ஷத்ரியர்கள்
  • காண - பார்த்துக் கொண்டிருக்கையில்
  • காணி முற்றும் - உலகம் முழுவதையும்
  • கொண்ட - நீரை ஏற்று தன்னதாக்கிக் கொண்ட
  • பத்திரம் - விலக்ஷணமான, மங்களகரமான
  • ஆகாரன் - வடிவை உடையனான இவன்
  • புறம் - என் முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • பார் - பூமியை
  • அளந்தான் – திரிவிக்கிரமனாய் அளந்த இவன்
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

குடையைப் பிடித்தவனாய், நிகரற்ற ஒரு ப்ரஹ்மசாரியாய், மகாபலியிடம் மூவடி மண்ணை யாசகமாகப் பெற்று, க்ஷத்ரியர்கள் பார்த்துக் கொண்டு இருக்கையில்,  உலகம் அனைத்தையும் தனதாக்கிக் கொண்ட சிறந்த லக்ஷணங்களைக் கொண்ட வடிவுடையவன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! த்ரிவிக்ரமனாய் பூமியை அளந்தவன், என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment