||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அறிஷ்தா வதம்|
பல்வேறு அசுரர்கள் கிருஷ்ணனை கொள்ள நினைத்தன, ஆனால் அவை அனைத்தும் கிருஷ்ணன் கைகளில் மடிந்தன. இதில் அறிஷ்தா என்ற காளை மாட்டினை எப்படி வதம் செய்தார் என்று பார்ப்போம். அறிஷ்தாவின் முதுகில் பெரிய கூனல் இருந்தது, உடல் மிக பெரியது, ஓடினால் பூமி அதிரும். அது மிகவும் கோபமுற்று இருந்தது, கால்களால் பூமியை தோண்டியது, வாலினை மேலே தூக்கியது, அனைவரையும் அழிக்க பிருந்தாவனத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது, அதன் கொம்புகளால் அனைத்து மரங்களையும் வேரோடு சாய்த்தது. எல்லோரும் அதை பார்த்து நடுங்கி கிருஷ்ணன் காலடியில் சரணடைந்தனர்.
புதிய ஆபத்தை அறிந்த கிருஷ்ணன், "அனைவரும் பயப்படாதீர்கள். நான் உங்களை காப்பாற்றுகிறேன்" என்றான். அந்த காளையை கண்டதுமே இது கம்சனால் ஏவப்பட்டது என்று உணர்ந்தான். அதனை நோக்கி, "ஏ முட்டாளே, இந்த அப்பாவி மக்களை ஏன் பயமுறுத்துகிறாய், உன்னை போன்ற அசுரர்களை அழிக்கவே நான் இங்கு உள்ளேன்".
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment