||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
030. திரு வண்புருஷோத்தமம் (திருநாங்கூர்)
முப்பதாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10
001. திவ்ய ப்ரபந்தம் - 1258 - காளியன் மீது நடனமாடியவன் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன்*
கதிர் முடி அவை பத்தும் அம்பினால் அறுத்து*
அரசு அவன் தம்பிக்கு* அளித்தவன் உறை கோயில்*
செம் பலா நிரை செண்பகம் மாதவி* சூதகம் வாழைகள் சூழ்*
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1259 - ஆநிரை காத்தவன் உறையும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி* அக் காளியன் பணவு அரங்கில்*
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த* உம்பர் கோன் உறை கோயில்*
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறு அங்கம்*
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1260 - கம்சனைக் கொன்றவன் உறையும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று*
அமைத்த சோறு அது எல்லாம் உண்டு*
கோ நிரை மேய்த்து அவை காத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
கொண்டல் ஆர் முழவில் குளிர் வார் பொழில்* குல மயில் நடம் ஆட*
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்* வண் புருடோத்தமமே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1261 - வாணாசுரனை வென்றவன் உறைவிடம் இக்கோயில்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து* அதன் பாகனைச் சாடிப் புக்கு*
ஒருங்க மல்லரைக் கொன்று* பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு* கழனியில் மலி வாவி*
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1262 - கண்ணன் உறை கோயில் வண்புருடோத்தமம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து* ஈசன் தன் படையொடும் கிளையோடும்
ஓட* வாணனை ஆயிரம் தோள்களும்* துணித்தவன் உறை கோயில்*
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்* பகலவன் ஒளி மறைக்கும்*
மாட மாளிகை சூழ் தரு நாங்கூர்* வண் புருடோத்தமமே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1263 - இரணியனைக் கொன்றவன் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று* அயன் அலர் கொடு தொழுது ஏத்த*
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய* கண்ணன் வந்து உறை கோயில்*
கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட* மா பதுமங்கள்*
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்* வண் புருடோத்தமமே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1264 - மேக வண்ணன் மேவும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
உளைய ஒண் திறல் பொன்பெயரோன்* தனது உரம் பிளந்து உதிரத்தை
அளையும்* வெம் சினத்து அரி பரி கீறிய* அப்பன் வந்து உறை கோயில்*
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு*
எழில் கொள் பந்து அடிப்போர்*
கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1265 - நான்முகனைப் படைத்தவன் உறையும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
வாளை ஆர் தடங் கண் உமை பங்கன்* வன் சாபம் மற்று அது நீங்க*
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த* எம் முகில் வண்ணன் உறை கோயில்*
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்* வண் பழம் விழ வெருவிப் போய்*
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்* வண் புருடோத்தமமே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1266 - இவற்றைப் படிப்போர் தேவரோடு கூடுவர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
இந்து வார் சடை ஈசனைப் பயந்த* நான் முகனை தன் எழில் ஆரும்*
உந்தி மா மலர் மீமிசைப் படைத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து* தன் குருளையைத் தழுவிப் போய்*
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்* வண் புருடோத்தமமே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1267 - திருநாங்கூர்ச் செம்பொன் செய் கோயில்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்* வண்புருடோத்தமத்துள்*
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்* ஆலி மன் அருள் மாரி*
பண்ணுளார் தரப் பாடிய பாடல்* இப் பத்தும் வல்லார்*
உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று* இமையவரோடும் கூடுவரே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment