||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
030. திரு வண்புருஷோத்தமம் (திருநாங்கூர்)
முப்பதாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1258 - 1267 - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
சாய்ந்த திரு அரங்கம் தண் வேங்கடம் குடந்தை*
ஏய்ந்த திரு மால் இருஞ்சோலை பூந்துவரை*
வண் புருடோத்தமம் ஆம் வானவர்க்கும் வானவன் ஆம்*
ஒண் புருடோத்தமன் தன் ஊர்*
- வானவர்க்கும் வானவன் ஆம் – தேவர்களுக்கு எல்லாம் தேவனாகிய
- ஒள் புருடோத்தமன்தன் – அழகிய புருஷோத்தமன் என்னும் திருமாலினது
- ஊர் – திருப்பதிகளாவன
- சாய்ந்த திருவரங்கம் – எம்பெருமான் பள்ளி கொண்டிருக்கின்ற ஸ்ரீரங்கமும்
- தண் வேங்கடம் – குளிர்ந்த திருவேங்கட மலையும்
- குடந்தை – திருக்குடந்தையும்
- ஏய்ந்த திருமாலிருஞ்சோலை – எம்பெருமானது திரு உள்ளத்துக்குப் பாங்காகப் பொருந்திய திருமாலிருஞ் சோலை மலையும்
- பூ துவரை – அழகிய துவாரகையும்
- வள் புருடோத்தமம் – திருவண்புருடோத்தமம்
- ஆம் – ஆகும்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment