About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 9 March 2024

108 திவ்ய தேசங்கள் - 029 - திரு அரிமேய விண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

029. திரு அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)
இருபத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1238 - 1247 - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

வாழும் அடியார் மட நெஞ்சே நம் அளவோ*
தாழும் சடையோன் சது முகத்தோன் பாழிக்*
கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய்*
அரிமேய விண்ணகரத் தார்க்கு*

  • மடம்நெஞ்சே – அறியாமையை உடைய மனமே! 
  • அரிமேய விண்ணகரத்தார்க்கு – திரு அரிமேய விண்ணகரம் என்னும் திவ்ய ஸ்தலத்தி எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு
  • வாழும் அடியார் – அடியவராக வாழ்கின்றவர்கள் 
  • நம் அளவோ – நாம் மாத்திரம் தானோ? அன்று
  • தாழும் சடையோன் – தொங்குகின்ற கபர்த்தம் என்னும் சடையை உடைய சிவபிரானும்
  • சதுமுகத்தோன் – நான்கு முகங்களை உடைய பிரம்ம தேவனும்
  • பாழி கரிமேய விண் நகரம் காவலோன் – பலம் பொருந்திய ஐராவதம் என்னும் யானை மேல் ஏறிச் செல்லுகின்ற
  • சுவர்க்க லோகத்துக்கு அரசனாகிய இந்திரனும் அடியவராவர்
  • கண்டாய் – முன்னிலையசை, தேற்றமுமாம்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment