||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
029. திரு அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)
இருபத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1238 - 1247 - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
வாழும் அடியார் மட நெஞ்சே நம் அளவோ*
தாழும் சடையோன் சது முகத்தோன் பாழிக்*
கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய்*
அரிமேய விண்ணகரத் தார்க்கு*
- மடம்நெஞ்சே – அறியாமையை உடைய மனமே!
- அரிமேய விண்ணகரத்தார்க்கு – திரு அரிமேய விண்ணகரம் என்னும் திவ்ய ஸ்தலத்தி எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு
- வாழும் அடியார் – அடியவராக வாழ்கின்றவர்கள்
- நம் அளவோ – நாம் மாத்திரம் தானோ? அன்று
- தாழும் சடையோன் – தொங்குகின்ற கபர்த்தம் என்னும் சடையை உடைய சிவபிரானும்
- சதுமுகத்தோன் – நான்கு முகங்களை உடைய பிரம்ம தேவனும்
- பாழி கரிமேய விண் நகரம் காவலோன் – பலம் பொருந்திய ஐராவதம் என்னும் யானை மேல் ஏறிச் செல்லுகின்ற
- சுவர்க்க லோகத்துக்கு அரசனாகிய இந்திரனும் அடியவராவர்
- கண்டாய் – முன்னிலையசை, தேற்றமுமாம்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment