About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 29 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 116

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 86

ஸுவர்ண பி³ந்து³ ரக்ஷோப்⁴ய: 
ஸர்வ வாகீ³ஸ்² வரேஸ்² வர:|
மஹா ஹ்ரதோ³ மஹா க³ர்த்தோ 
மஹா பூ⁴தோ மஹாநிதி⁴:||

  • 806. ஸுவர்ண பி³ந்து³ர் - கேட்பவர் மயங்கும்படி மிகவும் இனிமையாகப் பேசுபவர். தங்க நிறமுள்ள உறுப்புகளோடு கூடிய அழகிய வடிவத்தை உடையவர். மங்களகரமான பிரணவ மந்திரத்தின் வடிவில் இருப்பவர். மங்கள எழுத்துக்களைக் கொண்ட வேதங்களை அறிந்தவர். நெற்றி, கன்னங்கள் போன்றவற்றில் அழகான தங்க நிற சந்தனக் குறிகளை உடையவர்.
  • 807. அக்ஷோப்⁴யஸ் - கலக்க முடியாதவர். ஆசைகள் மற்றும் வெறுப்பு போன்ற உள் கவனச் சிதறல்களால், அசுரர்கள் போன்ற வெளிப்புற எதிரிகளால் கிளர்ச்சியோ குழப்பமோ அடையாதவர்.
  • 808. ஸர்வ வாகீ³ஸ்² வரேஸ்² வரஹ - வல்லமையாகப் பேசுபவர்கள் அனைவருக்கும் மேலானவர். பிரம்மா போன்று எல்லா வார்த்தைகளிலும், பேச்சில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் இறைவன். பேச்சின் அதிபதி.
  • 809. மஹா ஹ்ரதோ³ - ஆழ்ந்த மடுவாக இருப்பவர். பாவிகளை மூழ்கடித்து, பக்தர்கள் நிவாரணம் பெறும் பரந்த ஏரி. யோகிகள் அவரது பேரின்பத்தில் அமைதியாக இருந்து, ஏரியில் மூழ்குவதைப் போன்ற சுகத்தைப் பெறுகிறார்கள்.
  • 810. மஹா க³ர்த்தோ – படு குழியாக இருப்பவர். பாவம் செய்பவர்களை சம்சாரம் என்ற பெரும் குழிக்குள் தள்ளுபவர். மகாபாரதப் புகழ் பெற்ற பெரிய தேரோட்டி. கொடியில் கருடனோடு கூடிய பெரிய தேரைக் கொண்டவர். சேஷாசலம் முதலிய பெரிய மலைகளில் வசிப்பவர். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உருவாகி, தங்கி, மீண்டும் ஒன்று இணைக்கும் பெரிய குழி. மாயையின் சக்தி ஒரு பள்ளம், அதை கடப்பது மிகவும் கடினம்.
  • 811. மஹா பூ⁴தோ - மகான்களைத் தன் உறவினராகக் கொண்டவர். அவர் ஒரு பெரியவர். அவர் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய காலத்தின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவர். பெரிய மனிதர்களைத் தம்முடையவர்களாகக் கருதுபவர். அவர் ஐந்து உறுப்புகளின் தோற்றம்.
  • 812. மஹா நிதி⁴ஹி - மகான்களைப் பெருஞ் செல்பவமாக உடையவர். எல்லா உயிர்களும் அவரில் வசிக்கின்றன, எனவே அவர் நிதியாக இருக்கிறார். தன் பக்தர்களின் வடிவில் பெரும் பொக்கிஷத்தை உடையவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.53

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.53
 
ஸ்²ருதி விப்ரதி பந்நா தே 
யதா³ ஸ்தா²ஸ்யதி நிஸ்²சலா|
ஸமாதா⁴ வசலா பு³த்³தி⁴: 
ஸ்ததா³ யோக³ மவாப்ஸ் யஸி||

  • ஸ்²ருதி - வேதங்களின் 
  • விப்ரதிபந்நா - பலன்களின் விளைவுகளால் பாதிக்கப்படாத 
  • தே - உனது 
  • யதா³ - எப்போது 
  • ஸ்தா²ஸ்யதி - நிலைபெறுகிறதோ 
  • நிஸ்²சலா - அசைவற்று 
  • ஸமாதௌ⁴ - திவ்யமான உணர்வில் 
  • அசலா - உறுதியான 
  • பு³த்³தி⁴ஹி - அறிவு 
  • ததா³- அப்போது 
  • யோக³ம் - தன்னுணர்வை 
  • அவாப்ஸ்யஸி - அடைவாய்

வேதங்களின் பலன்களின் விளைவுகளால் பாதிக்கப்படாமல், எப்போது, உனது மனம் அசைவற்று, திவ்யமான உணர்வில், உறுதியான அறிவு நிலை பெறுகிறதோ, அவ்வேளையில், தன் உணர்வை அடைவாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.6

கத²மாலக்ஷித: பௌரை: 
ஸம்ப்ராப்த: குரு ஜாங்க³லாந்|
உந்மத்த மூகஜட³வத்³
விசரந் க³ஜ ஸாஹ் வயே||

  • குரு ஜாங்க³லாந் - குரு, ஜாங்கலம் என்ற தேசங்களை
  • ஸம்ப்ராப்தஹ் - அடைந்தவராய்
  • க³ஜ ஸாஹ் வயே - ஹஸ்தினாபுரத்தில்
  • உந்மத்த மூக ஜட³வத்³ - பைத்தியம் போன்றும், ஊமை போற்றும், ஒன்றும் தெரியாதவர் போன்றும்
  • விசரந் - சஞ்சரிக்கரவராய் கொண்டு  
  • பௌரைஹி - பட்டணத்து ஜனங்களால்
  • கத²ம் ஆலக்ஷிதஃ - இவர் சுகர் என்று எவ்வாறு தெரிந்து கொள்ள பட்டார்

இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த ஸ்ரீ ஸுகர், குரு தேசம், ஜாங்கல தேசம் ஆகியவற்றைக் கடந்து அஸ்தினாபுரம் வந்தடைந்த போது, பித்தன் போலவும், ஊமை போலவும் திரிந்த இவரை, எவ்வாறு அந்த நகர மக்கள் அறிந்து கொண்டனர்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.51

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.51

ந விரோதோ⁴ ப³லவதா 
க்ஷமோ ராவண தேந தே|
அநாத்³ ருத்ய து தத்³ வாக்யம் 
ராவண: கால சோதி³த:|| 

  • தேந - அந்த
  • ப³லவதா - பலசாலியுடன்
  • தே - உனக்கு
  • விரோதோ⁴ - விரோதம்
  • க்ஷமோ - ஸஹிக்கக் கூடியது 
  • ந - இல்லை என்று
  • ராவண - ராவணன்
  • து - ஆன போதிலும்
  • கால - விதிவசத்தால் 
  • சோதி³தஹ - தூண்டப்பட்டவன் ஆன
  • ராவணஹ - ராவணன் 
  • தத்³ - அவனுடைய
  • வாக்யம் - வார்த்தையை
  • அநாத்³ ருத்ய - லட்சியம் செய்யாமல்

"இராவணா, அந்தப் பலவானைப் பகைப்பது உனக்குத் தகாது" என்று, ஆன போதிலும் (விதி வசத்தால்) காலத்தால் தூண்டப்பட்ட ராவணன், அந்தப் பேச்சை லக்ஷ்யம் செய்யாமல்,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 95 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 95 - செங்கண்மால் கேசவன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

திரை நீர்ச் சந்திர மண்டலம் போல்
செங்கண்மால் கேசவன்* 
தன் திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி* 
திகழ்ந்தெங்கும் புடை பெயர* 
பெரு நீர்த் திரையெழு கங்கையிலும்* 
பெரியதோர் தீர்த்த பலம் தரு நீர்ச்* 
சிறுச் சண்ணம் துள்ளம் சோரத்* 
தளர் நடை நடவானோ!

  • திரை நீர் - அலை வீசும் நீரை உடைய ஸமுத்திரத்தின் நடுவில் அசைந்து தோன்றுகிற
  • செங்கண்மால் - சிவந்த கண்களையும், கரு நிறத்தையும்
  • கேசவன் - கேசவன் என்னும் திருநாமம் உடைய இவன்
  • சந்திர மண்டலம் போல் - சந்திர மண்டலத்தைப் போல்
  • தன் - தன்னுடைய
  • திரு நீர் - அழகிய ஒளியை உடைய
  • முகத்து - திரு முகத்திலே
  • துலங்கு - விளங்குகின்ற
  • சுட்டி - சுட்டியானது
  • எங்கும் - எல்லா விடத்திலும்
  • திழ்ந்து - ப்ரகாசித்துக் கொண்டு
  • புடை பெயர் - இடமாகவும் வலமாகவும் அசையவும்
  • பெரு நீர்த் - சிறந்த தீர்த்தமாகிய
  • திரை எழு - அலைகள் எழும்பும்
  • கங்கையிலும் - கங்கையை விட
  • பெரியது -அதிகமான
  • ஓர் - ஒப்பற்ற
  • தீர்த்த பலம் - தீர்த்த நீராடிய பலத்தை
  • தரும் - கொடுக்கின்ற
  • நீர் - ஜலத்தை உடைத்தான
  • சிறு சண்ணம் - சிறிய சண்ணமானது
  • துள்ளம் சோர - துளி துளிகளாகச் சொட்டவும்
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

சிவந்த கண்களையுடையவனும் கரு நிறத்தவனுமான கண்ணன் கேசவன் அணிந்திருக்கும் பிரகாசமாக ஒளிவீசும் திருமுகத்துச் சுட்டியானது அவன் நடக்கும் போது அசைவது எப்படியுள்ளது என்றால் முழுச் சந்திர மண்டலத்தின் பிரதிபிம்பம் கருநிறக் கடலின் நடுவில் தோன்றி அலைகளால் அசைவது போலுள்ளதாம். உயர்ந்த அலை திரளும் கங்கை ஆற்றின் நீரைக் காட்டிலும் புனிதமான கண்ணனின் மூத்திர நீரானது துளித் துளியாக அவன் குறியிலிருந்து சொட்டும் படியே தளர் நடையாக அவன் நடந்து வர காத்து நிற்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 028 - திருக்காழி சீராம விண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

028. திருக்காழி சீராம விண்ணகரம் (சீர்காழி)
இருபத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ திரிவிக்கிரமன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ லோகநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ திரிவிக்ரமன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: திரிவிக்ரம நாராயணன், திருவிக்ரம மூர்த்தி
  • பெருமாள் உற்சவர்: தாடாளன்
  • தாயார் மூலவர்: லோக நாயகி
  • தாயார் உற்சவர்: மட்டவிழுங்குழலி
  • திருமுகமண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி:  சங்கு 
  • தீர்த்தம்: சக்கர 
  • விமானம்: புஷ்பகலா வர்த்தக
  • ஸ்தல விருக்ஷம்: பலா
  • ப்ரத்யக்ஷம்: அஷ்டகோண மஹரிஷி
  • ஆகமம்: வைகானஸம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10 

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

முன் மண்டபத்தில் வராக அவதாரம் எடுத்த பெருமாள் வலக்கையை தானம் பெற்ற கோலத்தில் வைத்து, இடக்கையில் குடை பிடித்து படி சாளக்கிராம மாலை அணிந்து காட்சி தருகிறார். ஸ்வாமியிடம் வேண்டிய செயல்கள் நிறைவேறிய பின் இவரிடம் நேர்த்திக் கடன்களை செலுத்துகிறார்கள். இவருக்கு அருகிலேயே கையில் வேலுடன், காலில் தண்டை அணிந்த கோலத்தில் திருமங்கையாழ்வார் இருக்கிறார். உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு ஸ்வாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ராமர் சந்நதியும், கோயிலுக்கு எதிரே வெளிப் புறத்தில் ஆஞ்சநேயர் சந்நதியும் இருக்கிறது. இங்குள்ள தங்க கருடனுக்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடக்கிறது. இக்கோயிலுக்கு மிக அருகிலேயே திருஞான சம்பந்தருக்கு பார்வதி தேவி பாலூட்டிய சட்டை நாதர் கோயில் இருக்கிறது.

கருவறையில் இடது காலை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு, வலக்கையை தானம் பெற்ற அமைப்பிலும், இடக்கையை மீதி ஒரு அடி எங்கே? எனக் கேட்டு ஒரு விரலை மட்டும் தூக்கிய படி திரிவிக்கிரமர் காட்சி தருகிறார். இவருக்கு மேல் உள்ள விமானம் புஷ்கலா வர்த்த விமானம் எனப்படும்.  சாளக்கிராம மாலை அணிந்தபடி இருக்கும் இவரது சங்கும், பிரயோக சக்கரமும் சாய்ந்த படியே இருக்கிறது. வலது பாதத்திற்கு அருகில் உற்சவர் தாடாளன் இருக்கிறார். இவரை "தவிட்டுப் பானை தாடாளன்' என்றும் சொல்கின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்."தாள்' என்றால் "பூமி அல்லது உலகம்', "ஆளன்' என்றால் "அளந்தவன்' என்று பொருள். தன் திருவடியால் மூன்று உலகங்களையும் அளந்தவன் என்பதால், ஆண்டாள் இவருக்கு "தாடாளன்' என்ற பெயரை சூட்டினாள். ஸ்வாமியை குறித்து ஆண்டாள் தனது திருப்பாவை, நாச்சியார் திருமொழியிலும் பாடி இருக்கிறாள். அருகில் குழந்தை தொட்டிலில் சந்தான கோபால கிருஷ்ணர் இருக்கிறார். புத்திரப்பேறு இல்லாதவர்கள் இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பெருமாள் தன் மார்பில் மகாலக்ஷ்மியை தாங்கிய படி இருப்பதைப் போல, இங்கு தாயார் லோக நாயகி மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கியபடி காட்சி தருகிறாள். ஒரு கால் ஊன்றி மற்றொரு காலைத் தூக்கி நின்று கொண்டு இருப்பதால் ஸ்வாமியின் பாதம் வலித்து விடாமல் இருக்க அவரை இத்தலத்தில் மகாலக்ஷ்மி தாங்குகிறாளாம். எனவே அவள் தன் மார்பில் ஸ்வாமி பதக்கத்தை அணிந்திருக்கிறாள். இந்த தரிசனம் விசேஷமானது. பெண்கள் இவளை வணங்கினால் கணவர் மீது கூடுதல் அன்பு காட்டுவர், பிரிந்து இருக்கும் கணவனுடன் மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை. உற்சவ தாயார், மூலவர் தாயாரை மறைத்தபடி இருப்பதால், இவளது திருமுகத்தை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். தன்னை தாங்கும் கணவனை தான் தாங்குவதை யாரும் பார்த்து விடாமல் இருக்க இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். வெள்ளிக் கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

தேவாரம் பாடிய நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் இவ்வூரில் தான் பிறந்தார். அவர் இங்கேயே தங்கி இருந்து சிவத் தொண்டு செய்து வந்தார். இக்கோயில் சிலகாலம் வழிபாட்டில் இல்லாதிருந்த போது, உற்சவர் தாடாளனை ஒரு மூதாட்டி தன் வீட்டில் ஒரு தவிட்டுப் பானையில் மறைத்து வைத்து தினமும் பூஜைகள் செய்து ஸ்வாமியை வணங்கி வந்தாள். ஒரு சமயம் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தார். அவருடன் வந்தவர்கள் திருமங்கையைப் போற்றிப் பாடிக் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சம்பந்தரின் சீடர்கள் அவர்களை அமைதியாகச் செல்லும்படி கூறினர். அவர்களோ மறுத்தனர். இருவருக்கும் இடையே வாதம் உண்டானது. இறுதியில் திருமங்கைக்கும், சம்பந்தருக்கும் மறு நாளில் வாத போட்டி வைப்பது என முடிவானது. எனவே, அன்றைய தினம் திருமங்கை சீர்காழியிலேயே தங்கினார்.  இரவில் திருமங்கையின் கனவில் தோன்றிய பெருமாள், தான் மூதாட்டியின் தவிட்டுப் பானைக்குள் இருப்பதாகவும், தன்னை வணங்கி வாதத்தில் வெல்லும் படி சொன்னார். அதன்படி மூதாட்டியிடம் தாடாளனை திருமங்கை வாங்கிக் கொண்டார். மறுநாள் போட்டி ஆரம்பமானது. சம்பந்தர் திருமங்கையிடம், ஒரு குறள் சொல்லும்படி கூறினார். திருமங்கை, "குறள்' எனும் சொல்லையே முதலாவதாக தொடங்கி பெருமாளின் பத்து அவதாரங்களைப் பற்றி ஒன்று, இரண்டு என வரிசையாக பாடினார். திருமங்கையின் பெருமையை உணர்ந்த சம்பந்தர் அவரைப் பாராட்டி தான் வைத்திருந்த வேலை அவருக்கு பரிசாகக் கொடுத்து, காலில் தண்டையையும் அணிவித்தார். திருமங்கையாழ்வார் ஞான சம்பந்தரை வாதத்தில் வென்று நாலு கவிப் பெருமாள் என்ற விருதை பெற்ற ஸ்தலம். பின் திருமங்கை இக்கோயிலை மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். தாடாளனையும், தாயாரையும் பாடியதோடு ஸ்வாமி எழுந்தருள காரணமான உரோமசரையும் சேர்த்து தன் பெயர்கள் அனைத்தையும் குறிப்பிட்டு மங்களாஸாஸநம் செய்தார்.

படைக்கும் கடவுளான பிரம்மா பல யுகங்கள் வாழும்படி சாகா வரம் பெற்று இருந்தார். இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகவே, தனது பணியையும் அவர் சரியாக செய்யவில்லை. அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார் மகாவிஷ்ணு. இதனிடையே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத் தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு ஆசை எழுந்தது. ஸ்வாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, தன் இடக் காலை தூக்கி திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், "என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை பெறுவீர்கள். மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்' என்று கூறி இத்தலத்தில் திரிவிக்கிரமனாக எழுந்தருளினார். மகாவிஷ்ணு சூட்சுமமாக தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா தன் கர்வம் அழியப் பெற்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Wednesday, 28 February 2024

லீலை கண்ணன் கதைகள் - 107

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணரின் முடிவு |

கிருஷ்ணர் இருந்த இடம் பக்கமாக அப்பொழுது ஜரை என்ற வேடன் ஒருவன் சென்றுக் கொண்டிருந்தான். கிருஷ்ணரின் ரோஜா வர்ணமுள்ள பாதங்களைப் பார்த்துவிட்டு, அது ஒரு பறவை என்று அவன் நினைத்தான். அதைக் குறிபார்த்து அம்பினால் அடித்தான். அந்த அம்பு மீனின் வயிற்றிலிருந்து கிடைத்த இரும்புத் துண்டினால் ஆனது. 


இறந்த பறவை இருக்கும் என்று வேடன் அங்கே ஓடி வந்தான். ஆனால் கிருஷ்ணர் தரையில் கிடந்தார். தான் செய்த தவறை நினைத்து வேடன் நடுநடுங்கினான். 

அவன் கிருஷ்ணரின் காலில் விழுந்து, "பிரபு என்னை அறியாமல் நான் தங்களுக்கு தீங்கு இழைத்து விட்டேன். நான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இந்தப் பாவத்தை நான் எப்படிப் போக்குவது என்று சொல்லுங்கள்" என்று வேண்டினான். 

கிருஷ்ணர் சிரித்தார். "எனக்கு உன்மீது சிறிது கூட கோபம் கிடையாது, நீ எனக்கு செய்துள்ள தொண்டை நான் பாராட்டுகிறேன். நீ சொர்க்கம் செல்ல வேண்டும் என்று அருள் புரிகிறேன்" என்று வாழ்த்தினார். 

கிருஷ்ணரின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்த ஜரை அவரை மூன்று முறை வலம் வந்து, பிறகு அவரை நமஸ்கரித்து விட்டு வீடு திரும்பினார். 

கிருஷ்ணரின் சாரதியான தாருகன் கிருஷ்ணரைத் தேடிக் கொண்டிருந்தான். கிருஷ்ணர் அணிந்திருந்த துளசி மாலையின் மணம் அவனை அவர் இருக்கும் இடத்துக்கு இழுத்தது. தன் யஜமானர் தரையில் கிடப்பதைப் பார்த்து, அவர் பக்கம் ஓடினார். 

அவனைப் பார்த்த கிருஷ்ணர், "தாருகா! எதையும் பேசுவதற்கு இப்பொழுது நேரம் இல்லை. யாதவர்கள் தங்களிடையே சண்டை போட்டுக் கொண்டு அழிந்து விட்டார்கள் என்றும், பலராமரும் மறைந்து விட்டார் என்றும், உறவினர்களிடம் சொல். நானும் சீக்கிரமே இந்த உடலை விட்டு போகப் போகிறேன். இனி நீங்களோ அல்லது என் உறவினர்களோ துவாரகையில் தங்கக் கூடாது. ஏனெனில், யாதவர்கள் இருந்த இந்த நகரம் கடலால் கொள்ளப்படும். நீங்கள் எல்லோரும் இந்திரப்பிரஸ்தம் சென்று அர்ஜுனன் ஆதரவில் இருங்கள்" என்று கூறினார். 

என்ன செய்வது என்று தெரியாமல் தாருகன் விம்மி விம்மி அழுதான். கிருஷ்ணரை மூன்று தடவை வலம் வந்து அவரை வணங்கினான். பிறகு அவன் வருத்தத்தோடு நகர் திரும்பினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 60

 ||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 5

ஸ்கந்தம் 03

விதுரர் கேட்ட கேள்விகளுக்கு மைத்ரேயர் மகிழ்வுடன் பதில் கூறத் துவங்கினார். “தர்ம ராஜரின் அம்சமான தாங்கள் வெற்றி கொள்ள முடியாத பகவானின் புகழ் மாலையை நொடிக்கு நொடி புதிதாகத் தொடுக்கிறீர்கள். உலக மக்கள் அற்ப சுகத்திற்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு செயலைச் செய்து, அதனால் பெரிய துன்பத்தை அடைகிறார்கள். அது நீங்கவே நான் பகவானைப் பற்றிய இந்த பாகவதத்தைக் கூறுகிறேன்.


இதை ஒரு சமயம் ஸங்கர்ஷண மூர்த்தி ஸனகாதி முனிவர்களுக்கு தானே முன் வந்து கூறினார். குறைவற்ற அறிவின் வடிவினரான ஸங்கர்ஷண மூர்த்தி பாதாள லோகத்தில் இருக்கிறார். ப்ரும்ம தத்வத்தை அறிய விரும்பிய ஸனகாதி முனிவர்கள், அவரிடம் சென்று வினவினார்கள். மானஸீக பூஜையில் தனக்கு ஆதாரமான பகவானைப் பூஜித்துக் கொண்டு இருந்தார் ஸங்கர்ஷணராகிய ஆதிஸேஷ பகவான். ஸனகாதிகள் கேள்வி கேட்டதும், மூடியிருந்த தாமரை மொட்டுப்போன்ற தன் திருக்கண்களைத் திறந்து அவர்களை நோக்கினார். ஸனகாதிகள் ப்ரும்மலோகத்திலிருந்து கிளம்பும் போது அங்கிருந்து பாதாளம் வரை பாயும் கங்கை நதியில் நீராடி வந்தனர். அதனால், அவர்கள் திருமுடியில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட திருமுடியை ஸங்கர்ஷணரின் திருப்பாத தாமரைகளில் வைத்து வணங்கினர். அவரது பெருமையை நன்கறிந்த அவர்கள், கசிந்து கண்ணீர் மல்கி அவர் புகழைப் பாடினர். அவர் மகிழ்ந்து பாகவதத்தை ஸனகாதியர்க்குச் சொன்னார். அதை ஸனத்குமாரர் ப்ரும்மசர்ய விரதம் பூண்ட ஸாங்க்யாயன முனிவர்க்குக் கூறினார்.

ஸாங்க்யாயனர் பகவானின் திருவிளையாடல்களை தனது சீடரும் எனது குருவுமாகிய பராசரர்க்கும், ப்ருஹஸ்பதி பகவானுக்கும் கூறினார். புலஸ்திய முனிவரின் பரிந்துரையின் பேரில், பராசர மஹரிஷி இந்த ஸ்ரீமத் பாகவதத்தை எனக்கு உபதேசித்தார். குழந்தாய் விதுரா, நீ மிகவும் ச்ரத்தை கொண்டவன். பக்தியும் விநயமும் கொண்ட உனக்கு நான் இதைச் சொல்கிறேன்.

படைப்பு துவங்கும் முன் ப்ரபஞ்சமே நீரில் ஆழ்ந்திருந்தது. அப்போது ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே பரிபூரண ஞான ஸ்வரூபமான ஆனந்தத்தில் திளைத்து வேறெந்த செயலுமின்றி ஆதிசேஷனாகிய படுக்கையில் கண்களை மூடிய வண்ணம் யோகத் துயில் கொண்டு இருந்தார். நெருப்பின் எரிக்கும் திறன் கட்டை முழுதும் பரவியிருப்பினும் அது மறைந்திருப்பது போல், அனைத்து ஜீவராசிகளின் சூக்ஷ்ம சரீரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, தன் வாசஸ்தலமாகிய நீரில் சயனித்துக் கொண்டு இருந்தார். படைப்பு துவங்கு முன் அனைத்தையும் விழிக்கச் செய்ய கால சக்தியை மட்டும் விழித்திருக்கச் செய்தார். காலசக்தி பகவானையே அச்சாணியாக உடையது. இவ்வாறு பகவான் ஆயிரம் சதுர் யுகங்கள் தனது சித் சக்தியுடன் உறங்கிக் கொண்டு இருந்த போது, தன்னாலேயே தூண்டப்பட்ட கால சக்தி ஜீவன்களையும், அவர்களது செயல்பாடுகளையும் செய்ய முடுக்கி விட்டது. அப்போது பகவானின் உடலிலேயே அத்தனை லோகங்களும் காணப்பட்டன. அவற்றின் மீது அவரது திருக்கண்ணோக்கு விழவே, பூத ஸூக்ஷ்மங்கள் ரஜோ குணத்தால் மாறுதல் அடைந்து, படைப்பைத் துவக்குவதற்கான சக்தியாக அவரது தொப்புளில் இருந்து வெளிப்பட்டன. பகவானின் தொப்புளில் இருந்து ஒரு தாமரை மலர் வெளி வந்தது. அதன் ஒளியால் ப்ரளய ஜலம் ப்ரகாசித்தது. அந்தத் தாமரையில் பகவான் அந்தர்யாமியாக உள் நுழைந்தார். அப்போது அதில் இருந்து தனக்குத் தானே அத்தனையும் உணர்ந்தவராக ப்ரும்ம தேவர் தோன்றினார்.

அவரை உலகம் ஸ்வயம்பூ (தான் தோன்றி) என்றழைக்கிறது. ப்ரும்ம தேவர் தன்னைச் சுற்றி ஏதுமின்றி தான் தனித்து இருப்பதைக் கண்டு நாலு புறங்களிலும் நோக்கினார். அப்போது அவருக்கு நான்கு முகங்கள் உண்டாயின. முதலில் அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இத்தாமரை மலரில் அமர்ந்துள்ள நான் யார்? என் பெயரென்ன? எந்த ஆதாரமும் இன்றி தாமரை எப்படித் தோன்றியது? இதன் அடியில் ஆதாரமாக இருப்பது எது? என்றெல்லாம் யோசனை செய்தார். ஏதும் விளங்காததால், தாமரையின் உள் நாளம் வழி கீழ் நோக்கிச் சென்று நீரின் அடி மட்டத்தை அடைந்தார். இருப்பினும் ஆதாரம் கிடைக்கவில்லை. இவ்வாறு இருளிலேயே தேடி தேடிப் பல காலம் கடந்து விட்டது. அனைத்து உயிர்களின் காலத்தைக் கணக்கிட்டு அழிக்கும் சக்தி தான் பகவானின் ஆயுதமான காலச் சக்கரம். அது அனைவர்க்கும் பயத்தை அளிப்பது. முயற்சி பயனற்றுப் போனதால் ப்ரும்ம தேவர் மீண்டும் தன் இடத்திற்கே வந்து அமர்ந்தார். மூச்சையும் மனத்தையும் அடக்கித் தவத்தில் மூழ்கினார். தேவர் காலக் கணக்கில் நூறாண்டுகள் கடுந்தவம் செய்தார். த்யான ஸமாதியில் அவருக்கு ஞானம் தோன்றியது. முன்பு தேடிக் காணாதது இப்போது இதயத்தில் ஒளிரக் கண்டார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Tuesday, 27 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 115

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 85

உத்³ப⁴வஸ் ஸுந்த³ரஸ் ஸுந்தோ³ 
ரத்ந நாப⁴ஸ் ஸுலோசந:|
அர்க்கோ வாஜஸநஸ்² ஸ்²ருங்கீ³ 
ஜயந்தஸ் ஸர்வ விஜ்ஜயீ:||

  • 796. உத்பவ: உயர்ந்தவர். ஸம்சாரத்தை விட உயர்ந்தவர். மேன்மையான பிறவியில் இருப்பவர். தனக்கு விருப்பமான போது, ​​விரும்பிய இடத்தில் பிறப்பை எடுக்கிறார். உயர்ந்த இடத்தில் (ஸ்ரீ வைகுந்தம்) வசிப்பவர். தேவர்களைப் படைத்தவர். தர்மத்தின் பாதுகாப்பிற்காக மீண்டும் மீண்டும் பிறந்தவர். 
  • 797. ஸுந்தர: அழகியவர்.
  • 798. ஸுந்த: உருகச் செய்பவர். தனது பக்தர்களிடம் இரக்கமுள்ளவர்.
  • 799. ரத்நநாப: மணிபோன்று அழகிய நாபியை உடையவர். ரத்தினம் போன்ற தொப்புளை உடையவர்.
  • 800. ஸுலோசந: அழகிய பார்வையை உடையவர். மயக்கும் கண்களை உடையவர்.

எட்டாம் நூறு திரு நாமங்கள் நிறைவு

  • 801. அர்க்க: துதிக்கப்படுபவர். வணக்கத்திற்கு தகுதியானவர்.
  • 802. வாஜஸந: நிறைந்த அளவில் அன்னம் உண்ணச் சொல்பவர். எல்லா உயிர்களுக்கும் ஊட்டத்தை அளிப்பவர்.
  • 803. ச்ருங்கீ: கொம்புகளுடன் தோன்றுபவர். இறைவன் தனது மத்ஸ்ய மற்றும் வராஹ அவதாரங்களில் கொம்புகளைக் கொண்டிருந்தார். கோவர்த்தன மலையின் உச்சியை கையில் ஏந்தியவர். ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் சக்தியை வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கியவர். தன் பக்தர்களின் மறுபிறவி பயத்தை அழிப்பவர்.
  • 804. ஜயந்த: வென்றவர். எதிரிகளை குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக வெல்கிறார். தனது பக்தர்களின் வெற்றிக்கு கருவியாக இருக்கிறார்.
  • 805. ஸர்வ: விஜ்ஜயீ: சிறந்த அறிவாளிகளையும் வென்றவர். எல்லாவற்றையும் கற்றுக் கொண்டவர்களை வென்றவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.52

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.52 

யதா³ தே மோஹ கலிலம் 
பு³த்³தி⁴ர் வ்யதித ரிஷ்யதி|
ததா³ க³ந்தாஸி நிர் வேத³ம் 
ஸ்²ரோ தவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச||

  • யதா³ - எப்பொழுது 
  • தே - உனது 
  • மோஹ - மயக்கமெனும் 
  • கலிலம் - அடர்ந்த காடு 
  • பு³த்³தி⁴: - அறிவோடு செய்யப்படும் உன்னத தொண்டு 
  • வ்யதிதரிஷ்யதி - கடந்து செல்லுகிறதோ 
  • ததா³ - அப்போது 
  • க³ந்தாஸி - நீ ஆவாய் 
  • நிர்வேத³ம் - சமநிலை 
  • ஸ்²ரோதவ்யஸ்ய - கேட்க வேண்டியவை 
  • ஸ்²ருதஸ்ய - முன்னரே கேட்டவை 
  • ச - மற்றும்

உனது அறிவோடு செய்யப்படும் உன்னத தொண்டு, எப்போது மோகக் குழப்பத்தை கடந்து செல்லுகிறதோ, அப்போது நீ கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் வேதனையேற்படாது, நீ சமநிலை ஆவாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.5

த்³ருஷ்ட் வாநு யாந்தம் ருஷி மாத்மஜம் அப்ய நக்³நம்
தே³வ்யோ ஹ்ரியா பரித³ து⁴ர்ந ஸுதஸ்ய சித்ரம்|
தத்³ வீக்ஷ்ய ப்ருச்ச²தி முநௌ ஜக³ து³ஸ்த வாஸ்தி
ஸ்த்ரீ பும்பி⁴தா³ ந து ஸுதஸ்ய விவிக்க த்³ருஷ்டே:||

  • ஆத்மஜம் - பிள்ளையை
  • அநு யாந்தம் - பின்தொடர்ந்து செல்லுகின்ற
  • ருஷிம் த்³ருஷ்ட் வா - வியாஸ மஹரிஷியைப் பார்த்து 
  • அக்³நம் அபி -  வியாஸர் ஆடையை உடுத்தியவராய் இருந்த போதிலும்
  • தே³வ்யோ - நீராடும் அப்ஸர ஸ்திரீகள்
  • ஹ்ரியா - வெட்கத்தால் ஆடைகளை
  • பரித³து⁴ர் - உடுத்திக் கொண்டனர்
  • ஸுதஸ்ய ந - அம்மணமாக உள்ள ஸுகர் சென்ற போது அவ்வாறு உடுத்திக் கொள்ளவில்லை
  • சித்ரம் தத்³ - அந்த வேடிக்கையைப் 
  • வீக்ஷ்ய - பார்த்து
  • முநௌ ப்ருச்ச²தி - வியாஸர் கேட்ட போது
  • ஜக³து³ஸ் - சொன்னார்கள் 
  • தவ - மிகவும் வயதான தங்களுக்கு
  • ஸ்த்ரீ பும்பி⁴தா³ அஸ்தி - ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடுகள் உள்ளது
  • விவிக்த த்³ருஷ்டேஹே - ஒரே மனப்பான்மை உடைய
  • ஸுதஸ்ய து - உமது பிள்ளைக்கோ
  • ந - அந்த பேதமானது ஒரு சிறிதும் இல்லை

எல்லாவற்றையும் துறந்து பற்றற்ற நிலையில் செல்கின்ற மகனான ஸ்ரீ ஸுகரை, அவரது தந்தையும் மரவுரி தரித்திருந்த வயோதிகருமான வியாஸ மகரிஷி மகன் மேல் கொண்ட பாசத்தால் பின்தொடர்ந்து செல்ல, வழியில் நீர்விளையாடல் புரிந்து கொண்டிருந்த அப்சர மகளிர், வியாஸர் ஆடை உடுத்தி இருப்பினும் வெட்கமுற்று தங்களது ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டார்கள். ஆடையின்றி திகம்பரராகச் செல்லும் இளைஞரான ஸ்ரீஸுகரைக் கண்டு அவர்கள் வெட்கப்படவில்லை. இந்த ஆச்சரியத்தைக் கண்ட வியாஸ முனிவர், அவர்களது செய்கைக்குக் காரணம் கேட்க, அந்த அப்சரப் பெண்கள், 'முனிவரே! தங்களுக்கு ஆண், பெண் என்கிற வேறுபாடு காணும் புத்தி உள்ளது. பரிசுத்த வஸ்துவில் பகவானிடம் மட்டுமே நாட்டமுள்ள தங்களது குமாரர் ஸுகருக்கு, எல்லாம் பிரும்ம ஸ்வரூபமாகவே காட்சி தருகிறது' என்று விடையளித்தார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.50

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.50

ஸஹாயம் வரயா மாஸ 
மாரீசம் நாம ராக்ஷஸம்|
வார்ய மாண: ஸுப³ ஹுஸோ² 
மாரீ சேந ஸ ராவண:|| 

  • மாரீசம் நாம - மாரீசன் என்ற
  • ராக்ஷஸம் - இராக்ஷஸனின்
  • ஸஹாயம் -  ஸஹாயனாக
  • வரயா மாஸ -  வேண்டினான்
  • ராவணஹ -  ஓ இராவணா!
  • ஸுப³ ஹுஸோ² -  பற்பல விதமாய்
  • வார்ய மாணஸ் -  தடுக்கப் பட்டான் 
  • மாரீ  சேந - மாரீசனாலே
  • ஸ -  அந்த

மாரீசன் என்ற பெயர் படைத்த இராக்ஷஸனின் உதவியை நாடினான். அந்த மாரீசன் இராவணனிடம், பற்பல விதமாய் சொல்லிப் பல முறை தடுத்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 94 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 94 - கரிய யானை குட்டி போன்ற திருவிக்கிரமன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்ததோர்* 
வேழத்தின் கருங்கன்று போல்* 
தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்* 
சிறு புகர் பட வியர்த்து* 
ஒண் போதலர் கமலச் சிறுக்காலுறைத்து* 
ஒன்றும் நோவாமே* 
தண் போது கொண்ட தவிசின் மீதே* 
தளர் நடை நடவானோ!

  • வெள் புழுதி - வெளுத்த புழுதியை
  • மேல் - தன் மேலே 
  • பெய்து கொண்டு - படிய விட்டுக் கொண்டு
  • அளைந்தது - அளைந்து
  • ஓர் வேழத்தின் - ஓர் கருத்த யானையின்
  • கருங்கன்று போல் - குட்டி போல
  • தெள் புழுதி - தெளிவான புழுதியிலே
  • ஆடி - விளையாடி
  • திரி விக்கிரமன் - தனது மூவடியால் உலகங்களை அளந்த திரிவிக்கிரமனாகிய இவன்
  • சிறு புகர் பட - பிரகாசமாகவும் சிறிது பளபளக்க
  • வியர்த்து - வேர்த்துப் போய்
  • போது - உரிய காலத்திலே
  • அலர் - மொக்கு மலர்ந்த
  • ஒண் - அழகிய
  • கமலம் - தாமரைப் பூவை ஒத்த
  • சிறு கால் - சிறிய பாதங்கள்
  • உறைத்து - ஏதேனும் ஒன்று உறுத்த அதனால்
  • ஒன்றும் நோவாமே - சிறிதும் நோவாதபடி
  • தண் போது கொண்ட - குளிர்ந்த புஷ்பங்களுடைய
  • தவிசின் மீது - மெத்தையின் மேலே 
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

வெள்ளை நிறம் கொண்ட புழுதியை யானை குட்டி தன் மேல் போட்டுக் கொள்ளுமாப் போலே, கண்ணனும் தெளிந்த புழுதியை தன் மேல் போட்டுக் கொண்டு, திருமேனியில் அங்குமிங்குமாக வியர்த்தவனாய் நின்றான். திரிவிக்கிரமனாய்  மூன்று உலங்கங்களையும் தன் திருவடிகளால் அளந்தவனுமான கண்ணனின் மலர்ந்த தமரையையொத்த திருப்பாதங்கள் உறுத்தாமலும் நோவாதும்படியாகவும் இருக்க குளிர்ந்த பூக்களாலான மெத்தையின் மேல் தளர் நடை நடந்து வர கண்ணனை வேண்டி நிற்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 027 - திருக்காவளம்பாடி 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

027. திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
இருபத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

001. திவ்ய ப்ரபந்தம் - 1298 - கோபால ஸ்வாமி விஷயம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம்  பாசுரம்
தா அளந்து உலகம் முற்றும்* தட மலர்ப் பொய்கை புக்கு*
நா வளம் நவின்று அங்கு ஏத்த* நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*
மா வளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும் நாங்கை*
காவளம்பாடி மேய* கண்ணனே களை கண் நீயே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1299 - மாவலி வேள்வியில் யாசித்தவன் ஊர் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
மண் இடந்து ஏனம் ஆகி* மாவலி வலி தொலைப்பான்* 
விண்ணவர் வேண்டச் சென்று* வேள்வியில் குறை இரந்தாய்* 
துண் என மாற்றார் தம்மைத்* தொலைத்தவர் நாங்கை மேய* 
கண்ணனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1300 - சுக்கிரீவனுக்கு அரசு அளித்தவன் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
உருத்து எழு வாலி மார்வில்* ஒரு கணை உருவ ஓட்டி* 
கருத்து உடைத் தம்பிக்கு* இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்* 
பருத்து எழு பலவும் மாவும்* பழம் விழுந்து ஒழுகும் நாங்கை* 
கருத்தனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1301 - விபீஷணனுக்கு அரசு அளித்தவன் வாழும் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்
முனை முகத்து அரக்கன் மாள* முடிகள் பத்து அறுத்து வீழ்த்து* 
ஆங்கு அனையவற்கு இளையவற்கே* அரசு அளித்து அருளினானே* 
சுனைகளில் கயல்கள் பாயச்* சுரும்பு தேன் நுகரும் நாங்கை* 
கனை கழல் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1302 - காளியன் மீது நடனமாடியவன் தங்கும் இடம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பட அரவு உச்சி தன் மேல்* பாய்ந்து பல் நடங்கள் செய்து* 
மடவரல் மங்கை தன்னை* மார்வகத்து இருத்தினானே* 
தட வரை தங்கு மாடத்* தகு புகழ் நாங்கை மேய* 
கடவுளே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1303 - பாரதப் போர் முடித்தவன் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மல்லரை அட்டு மாளக்* கஞ்சனை மலைந்து கொன்று* 
பல் அரசு அவிந்து வீழப்* பாரதப் போர் முடித்தாய்* 
நல் அரண் காவின் நீழல்* நறை கமழ் நாங்கை மேய* 
கல் அரண் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1304 - பாண்டவ தூதனானவன் உறைவிடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மூத்தவற்கு அரசு வேண்டி* முன்பு தூது எழுந்தருளி* 
மாத்து அமர் பாகன் வீழ* மத கரி மருப்பு ஒசித்தாய்* 
பூத்து அமர் சோலை ஓங்கிப்* புனல் பரந்து ஒழுகும் நாங்கை* 
காத்தனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1305 - ஸத்ய பாமைக்காகக் கற்பக மரம் கொணர்ந்தவன் ஊர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
ஏவு இளங் கன்னிக்கு ஆகி* இமையவர் கோனைச் செற்று* 
கா வளம் கடிது இறுத்துக்* கற்பகம் கொண்டு போந்தாய்* 
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த* புரந்தரன் செய்த நாங்கை* 
காவளம்பாடி மேய* கண்ணனே களை கண் நீயே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1306 - திருக்காவளந்தண் பாடியானே நமக்குக் கதி
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
சந்தம் ஆய்ச் சமயம் ஆகிச்* சமய ஐம் பூதம் ஆகி* 
அந்தம் ஆய் ஆதி ஆகி* அரு மறை அவையும் ஆனாய்* 
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்* மட மயில் ஆலும் நாங்கை* 
கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1307 - அரசர்க்கு அரசர் ஆவர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மா வளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும்* நாங்கைக்
காவளம்பாடி மேய* கண்ணனைக் கலியன் சொன்ன* 
பா வளம் பத்தும் வல்லார்* பார்மிசை அரசர் ஆகிக்* 
கோ இள மன்னர் தாழக்* குடை நிழல் பொலிவர் தாமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்