||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 46
விஸ்தார: ஸ்தா² வரஸ் தா²ணு:
ப்ரமாணம் பீ³ஜ மவ்யயம்|
அர்த்ததோ² நர்த்தோ² மஹா கோஸோ²
மஹா போ⁴கோ³ மஹா த⁴ந:||
- 427. விஸ்தாரஸ் - அவர் எல்லாவற்றிலும் பரவியிருக்கிறார். வேதங்களை பரப்புபவர். பிரளய காலத்தில் அனைத்தையும் உள்ளடக்கி விரிவடைபவர்.
- 428. ஸ்தா² வரஸ் தா²ணுஃ - கிருத யுகத்தில் தர்மத்தை ஸ்தாபித்த பிறகு அமைதியானவர். பூமி போன்ற பொருள்கள் தங்கியிருக்கும் நிலையிலும், அசையாமலும், உறுதியுடனும் நிலையாக இருப்பவர். மனச்சாந்தியுடையவர்.
- 429. ப்ரமாணம்: - பிரமாண மானவர். அதிகாரியாயிருப்பவர்.
- 430. பீ³ஜம் அவ்யயம் - அழிவில்லாத வித்தாக இருப்பவர்.
- 431. அர்த்ததோ² - அடையத்தக்கதான பயனாக உள்ளவர்.
- 432. அநர்த்தோ² - சுயநினைவுடையவர். தேடுவதற்கு வேறு எந்த முடிவும் இல்லாதவர். சிலருக்கு இலக்காக இல்லாதவர்.
- 433. மஹா கோஸோ² - பெரும் பொக்கிஷத்தை உடையவர். பெரும் பொக்கிஷமாக இருப்பவர். ஐந்து கோஷங்கள் அல்லது கவசங்களால் கவசமாக இருப்பவர்.
- 434. மஹா போ⁴கோ³ - இன்பங்கள் அனைத்தும் அளிப்பவர்.
- 435. மஹா த⁴நஹ - அளவற்ற பெருந்தனமாய் இருப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment