About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 18 November 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.11

ஷஷ்ட²ம் அத்ரேர் அபத் யத்வம் 
வ்ருத: ப்ராப் தோ ந ஸூயயா|
ஆந்வீ க்ஷிகீம் அலர் காய 
ப்ரஹ்லாதா³ தி³ப்ய ஊசிவாந்||

  • அந ஸூயயா வ்ருதஃ - அத்ரி மகரிஷியின் பத்தினியால் வரிக்கப்பட்டவராய்
  • ஷஷ்ட²ம் - ஆறாவதான அவதாரத்தில்
  • அத்ரேர் - அத்ரி மகரிஷிக்கு
  • அபத் யத்வம் ப்ராப் தோ - குழந்தையாய் இருக்கும் தன்மையை அடைந்தவராய்
  • அலர் காய - அலக்கனுக்கும்
  • ப்ரஹ்லாதா³ தி³ப்ய - பிரஹ்லாதன் முதலானவர்களுக்கும்
  • ஆந்வீ க்ஷிகீம் - ஆத்ம வித்தையை
  •  ஊசிவாந் - உபதேசம் செய்தார்

ஆறாவதாக, அத்ரி மகரிஷியின் பத்தினியான அனசூயா தேவியினால் வேண்டிக் கொள்ளப்பட்டு, அவருக்குப் புத்திரனாய் 'தத்தாத்ரேயர்' என்ற பெயரோடு திருவவதாரம் செய்து, அலர்க்கன் என்ற ராஜரிஷிக்கும், பிரகலாதன் முதலியோருக்கும் ஆன்ம ஞானத்தை உபதேசம் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment