||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணரின் வாக்குறுதி|
ருக்மிணியின் செய்தியைக் கேட்ட கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, "என்னை திருமணம் செய்துக் கொள்ள ருக்மிணி ஆவலாக இருக்கிறாள் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. நானும் அதே ஆவலுடன் தான் இருக்கிறேன். ருக்மியின் எதிர்ப்புக் காரணமாக நான் ருக்மிணியைத் திருமணம் செய்து கொள்வதில் தடைப்பட்டு விட்டது என்பது எனக்குத் தெரியும். இந்தப் பாவிகளை நான் முறியடிப்பேன். அவர்கள் கண் எதிரிலேயே நான் ருக்மிணியைத் துவாரகைக்கு கொண்டு வருவேன்" என்று சவால் விட்டார். இதனை கேட்ட அந்தணர், சந்தோஷத்தில் கிருஷ்ணனை தழுவிக் கொண்டார்.
ருக்மிணியின் திருமணம் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்தது. அதை அறிந்த கிருஷ்ணர் தமது சாரதி தாருகனைக் கூப்பிட்டான், இரதத்தை உடனே தயார் செய்யும்படி கட்டளையிட்டார். நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தை தாருகன் கொண்டு வந்து நிறுத்தினான். கிருஷ்ணர் அந்த அந்தணரையும் தம்மோடு இரதத்தில் ஏற்றிக் கொண்டார். அந்தக் குதிரைகள் வலிமை வாய்ந்தவையாகவும் வேகமாகச் செல்லக் கூடியதாகவும் இருந்தன. ஆதலால் அவர்கள் இரவு முழுவதும் பயணம் செய்து, விடியற்காலை விதர்ப்ப தேசத்தை அடைந்தார்கள்.
இதற்கிடையில் பீஷ்மகர் தம் மகளின் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து விட்டார். சிசுபாலனும் அவனைச் சேர்ந்தவர்களும் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேர்கள். யானைப் படைகள், குதிரைப் படைகள், காலாட் படைகள் இவற்றுடன் முன்னமேயே வந்து விட்டார்கள். பீஷ்மகர் அவர்களை வரவேற்று தக்கபடி உபசரித்து அவர்களை அவர்களுக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த தனி மாளிகையில் தங்கச் செய்தார்.
மணப்பந்தலில் எத்தனையோ அரசர்கள் காணப்பட்டனர். அவர்கள் எல்லோரும் சிசுபாலனின் நண்பர்கள். கிருஷ்ணரும் அந்தணரும் யாதவப் படைகளை கொண்டு ருக்மிணியைத் தூக்கிச் செல்ல நேரம் பார்த்துக் கொண்டு காத்திருந்தனர், அவர்கள் தங்கள் பெருத்த சேனையை உடன் அழைத்து வந்திருந்தனர்.
சிசுபாலனிடமிருந்து ருக்மிணியைக் காப்பாற்ற, கிருஷ்ணர் அவசரமாக விதர்ப்ப தேசம் சென்றிருக்கிறார் என்ற விஷயம் பலராமருக்கு தெரிய வந்தது. அவர், சிசுபாலனும் அவனுடைய நண்பர்களும் கிருஷ்ணருக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடும் என்று நினைத்தார். அவரும் ரத, கஜ, துரக, பதாதிகள் கொண்ட பெரிய சேனையுடன் விதர்ப்பம் விரைந்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment