About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 20 November 2023

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.13

ப்ரஜாபதி ஸம: ஸ்²ரீமாந்
தா⁴தா ரிபு நிஷூத³ந:|
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய
த⁴ர்மஸ்ய பரி ரக்ஷிதா||

  • ப்ரஜாபதி ஸமஸ் - பிரம்ம தேவருக்கு ஒப்பானவர்
  • ஸ்²ரீமாந் -  ஸ்ரீயை உடையவர்
  • தா⁴தா -  போஷிக்கிறவர்
  • ரிபு நிஷூத³நஹ - சத்ருக்களைத் தோற்கடிப்பவர்
  • ரக்ஷிதா -  ரக்ஷகர்
  • ஜீவ லோகஸ்ய -  ப்ராணி ஸமூஹத்திற்கு
  • த⁴ர்மஸ்ய -  தர்மத்தினுடைய 
  • பரி ரக்ஷிதா - அன்பான ரக்ஷகர்

பிரஜாபதிக்கு {பிரம்மருக்கு} இணையான தாதாவும் {அண்டத்தை ஆதரிக்கும் விஷ்ணுவும்}, ஸ்ரீயுடன் கூடியவனுமான அவன் {ராமன்}, பகைவரை அழித்து, உயிரினங்களின் உலகைக் காத்து, அறத்தை முழுமையாகப் பாதுகாக்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

No comments:

Post a Comment