||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஜராசந்தனின் கதை|
ஜராசந்தனின் கதையைக் கிருஷ்ணர் சொல்ல ஆரம்பித்தார்.
பிருகத்ரன் என்ற ஓர் அரசன் இருந்தான். வெகு நாளாக அவனுக்குக் குழந்தையே பிறக்கவில்லை. ஒரு நாள் காட்டில் அவன் ஒரு முனிவரைப் பார்த்தான். அவரிடம் அவன் தன் குறையைச் சொன்னதும், பழம் ஒன்றை அவர் அவனிடம் கொடுத்தார், "இதை உன் மனைவியைச் சாப்பிடச் சொல், அவளுக்கு ஒரு பிள்ளை பிறப்பான். அவன் மிகுந்த பராக்கிரமசாலியாகவும் சிறந்த சிவபக்தனாகவும் விளங்குவான்" என்றார்.
அரசனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். அதனால் அரசன் பழத்தை இரண்டு துண்டாக்கித் தன் மனைவிகளுக்கு ஆளுக்கொரு பாதியைக் கொடுத்தான். இரண்டு பெரும் கருவுற்று உரிய காலத்தில் ஆளுக்கு ஒரு குழந்தையைப் பெற்றார்கள். ஆனால் என்ன ஆச்சரியம்! இரண்டு ராணிகளுமே ஆளுக்கு ஒரு பாதிக் குழந்தையைப் பெற்றெடுத்தனர். பாதி தலை, ஒரு கண், ஒரு மூக்குத் துவாரம், ஒரு தோள் என்று இப்படி இருந்த அந்த உயிரற்ற குழந்தைகளைப் பார்க்கக் கோரமாக இருந்தது. அரசன் வெறுப்புற்று, அந்த இரண்டு பத்திக் குழந்தைகளையும் ஒரு குழியில் போட்டுவிட்டான்.
அந்த நகரில் ஜரா என்ற ஓர் அரக்கி இருந்தாள். ஒவ்வோர் இரவும் அவள் நகருக்குள் நுழைந்து, கிடைத்ததைச் சாப்பிடுவாள். அன்று இரவு அந்த இரண்டு பாதி உடல்களைப் பார்த்து அவள் ஆச்சரியப் பட்டாள். பிறகு அவள் அந்த இரண்டு பாதிகளையும் ஒன்று சேர்த்தாள். என்ன ஆச்சரியம்! அந்த இரண்டு பாதி உடல்களும் ஒட்டிக் கொண்டதோடு, குழந்தை உயிர் பெற்று அழ ஆரம்பித்தது.
அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு அரசனிடம் சென்று, "இந்தா, உன் மகன்" என்று கொடுத்தாள். நடந்ததை கேட்டு அரசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ஜராவினால் சேர்க்கப்பட்டதனால், அந்தக் குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயர் வைத்தான், இப்பொழுது ஜராசந்தன் நல்ல பலசாலியாக விளங்குவதுடன் சிறந்த சிவபக்தனாகவும் விளங்கினான்.
கிருஷ்ணர் சொன்ன ஜராசந்தனின் கதையைக் கேட்டு எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment