About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 20 December 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.21

தத: ஸப்த த³ஸே² ஜாத: 
ஸத்ய வத்யாம் பராஸ²ராத்|
சக்ரே வேத³ தரோ: ஸா²கா² 
த்³ருஷ்ட்வா பும்ஸோல்ப மேத⁴ஸ:||

  • தத: ஸப்த த³ஸே² - பிறகு பதினேழாவது அவதாரத்தில் 
  • பும்ஸோ அல்ப மேத⁴ஸஹ - ஜனங்களை மந்த புத்தியை உடையவர்களாய் 
  • த்³ருஷ்ட்வா - பார்த்து 
  • பராஸ²ராத் - பராசரரிடத்திலிருந்து 
  • ஸத்ய வத்யாம் - ஸத்யவதியினிடத்தில் 
  • ஜாதஹ - உண்டானவராய் 
  • வேத³ தரோஸ் - வேதமாகிய பெரிய விருக்ஷத்தின்
  • ஸா²கா² - கிளைகளை 
  • சக்ரே - செய்தார். அதாவது வேத விபாகம் செய்தார் என்பது அர்த்தம்

மானிடர்கள் அறிவு குன்றியிருப்பது கண்டு, பராசரருக்கு சத்யவதியிடம் வியாசர் என்ற திருப்பெயருடன் பதினேழாவதாக அவதாரம் செய்து, வேதமாகிய பெரிய மரத்தைக் கிளை (சாகை) களாகப் பிரித்தார். வேத சாகைகளை ஏற்படுத்தினார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment