About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 19 November 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.12

தத: ஸப்தம ஆகூத்யாம் 
ருசேர் யஜ்ஞோ ப்⁴ய ஜாயத|
ஸயா மாத்³யை: ஸுர க³ணைர் 
அபாத் ஸ்வாயம்பு⁴ வாந்தரம்||

  • ததஸ் - பிறகு
  • ஸப்தம -  ஏழாவதான அவதாரத்தில்
  • ருசேர் - ருசியிடத்தில் இருந்து
  • ஆகூத்யாம் - ஆகூதியிடத்தில்
  • யஜ்ஞ - யக்ஞன் என்ற பெயரோடு 
  • அப்⁴ய ஜாயத - உண்டானார்
  • ஸ - அப்படிப்பட்டவர்
  • யா மாத்³யைஸ் ஸுர க³ணைர் - யாமன் என்ற தனது குழந்தைகளான தேவ கூட்டங்களோடும்
  • ஸ்வாயம்பு⁴ வாந்தரம் - ஸ்வயம்புவ மன்வந்தரத்தை
  • ஆபாத் - தானே காப்பாற்றினார்

அதன் பிறகு ஏழாவது அவதாரமாக, ருசி என்ற பிரஜாபதியின் மனைவியான ஆகூதி என்பவளிடம் 'யக்ஞன்' என்ற பெயரோடு திரு அவதாரம் செய்து, தன் புத்திரர்களான யாமன் முதலிய தேவர்களுடன் ஸ்வாயம்புவ மன்வந்தரத்தைக் காப்பாற்றினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment