||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.12
தத: ஸப்தம ஆகூத்யாம்
ருசேர் யஜ்ஞோ ப்⁴ய ஜாயத|
ஸயா மாத்³யை: ஸுர க³ணைர்
அபாத் ஸ்வாயம்பு⁴ வாந்தரம்||
- ததஸ் - பிறகு
- ஸப்தம - ஏழாவதான அவதாரத்தில்
- ருசேர் - ருசியிடத்தில் இருந்து
- ஆகூத்யாம் - ஆகூதியிடத்தில்
- யஜ்ஞ - யக்ஞன் என்ற பெயரோடு
- அப்⁴ய ஜாயத - உண்டானார்
- ஸ - அப்படிப்பட்டவர்
- யா மாத்³யைஸ் ஸுர க³ணைர் - யாமன் என்ற தனது குழந்தைகளான தேவ கூட்டங்களோடும்
- ஸ்வாயம்பு⁴ வாந்தரம் - ஸ்வயம்புவ மன்வந்தரத்தை
- ஆபாத் - தானே காப்பாற்றினார்
அதன் பிறகு ஏழாவது அவதாரமாக, ருசி என்ற பிரஜாபதியின் மனைவியான ஆகூதி என்பவளிடம் 'யக்ஞன்' என்ற பெயரோடு திரு அவதாரம் செய்து, தன் புத்திரர்களான யாமன் முதலிய தேவர்களுடன் ஸ்வாயம்புவ மன்வந்தரத்தைக் காப்பாற்றினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment