About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 19 November 2023

108 திவ்ய தேசங்கள் - 016 - திருக்கண்ணமங்கை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

016. திருக்கண்ணமங்கை 
க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம் - திருவாரூர்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் 
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 14 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 14 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) -12 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1638 - 1647 - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1848 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2008 - பதினொன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம் - 1 பாசுரம்

2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)

3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2773 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)

----------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா*
ஒருத்தனை நீ நெஞ்சே உணரில் பெருத்த முகில்*
வண்ணம் அம்கை கண் கால் வனசம் திரு அரங்கம்*
கண்ணமங்கை ஊர் என்று காண்*

  • நெஞ்சே - மனமே! 
  • கருத்தினால் - மனத்தினாலும்
  • வாக்கினால் - வாக்கினாலும்
  • நால் மறையும் - நான்கு வேதங்களும்
  • காணா - கண்ட றிய முடியாத
  • ஒருத்தனை - ஒப்பற்ற திருமாலை
  • நீ உணரின் - நீ அறிய விரும்பினால், அவனுக்கு
  • வண்ணம் - திருமேனி நிறம்
  • பெருத்த முகில் - பெரிய காளமேகமாம்
  • அம் கை - அழகிய திருக்கைகளும்
  • கண் - திருக்கண்களும்
  • கால் - திருவடிகளும்
  • வனசம் - செந்தாமரை மலர்களாம்
  • ஊர் - இருப்பிடம்
  • திருவரங்கம் - ஸ்ரீரங்கமும்
  • கண்ணமங்கை - திருக்கண்ணமங்கையுமாம் என்று 
  • காண் - அறிவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment