About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 31 October 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.3 

க்லை ப்³யம் மாஸ்ம க³ம: பார்த² 
நைதத் த்வய் யுப பத்³யதே|
க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர் ப³ல்யம் 
த்யக்த் வோத்திஷ்ட² பரந்தப||

  • க்லை ப்³யம் - ஆண்மையின்மை
  • மா ஸ்ம - இல்லை 
  • க³மஃ - அடைதல் 
  • பார்த² - பிருதாவின் மைந்தனே 
  • ந - ஒருபோதும் இல்லை 
  • ஏதத் - இதுபோல 
  • த்வயி - உனக்கு 
  • உப பத்³யதே - பொருத்தமானதல்ல 
  • க்ஷுத்³ரம் - அற்பமான 
  • ஹ்ருத³ய - இதயம் 
  • தௌ³ர் ப³ல்யம் - பலவீனம் 
  • த்யக்த்வா - விட்டுவிட்டு
  • உத்திஷ்ட² - எழுவாய்
  • பரந்தப - எதிரிகளை தவிக்கச் செய்பவனே

பிருதாவின் மகனே, இது போன்ற கோழைத் தன்மையை, ஒரு போதும் அடையாதே. இது உனக்கு பொருத்தமானதல்ல. எதிரிகளை தவிக்கச் செய்பவனே, அற்பமான இதய பலவீனத்தை கைவிட்டு, எழுவாயாக. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment